Friday 6 January 2012

ஹசாரே தாத்தாவின் சாயம் வெளுக்கிறது



ஊழலுக்கு எதிரான போராட்டத்தை அன்னா ஹசாரே அறிவித்த போது அவர் யார் என்பது தெரியாத நிலையிலும் அவருக்கு பின்னால் திரண்ட லட்சக்கணக்கான இந்தியர்களில் நானும் ஒருவன் என்பதை நான் மறுக்கவில்லை .  ஆனால் தொடர்ந்து நிலவி வரும் சில சூழ்நிலைகளை பார்க்கும் போது அன்னா ஹசாரேவின் குழுவின் மேல் எனக்கு இருக்கும் நம்பிக்கை குறைந்து போய் விட்டது என்பது தான் உண்மை.   அடுக்கடுக்காக அவரது குழுவின் நபர்கள் மேல் குற்றசாட்டுகள் வரும் நிலையில் , குழுவின் மூத்த உறுப்பினரும்  , மூத்த வக்கீலுமான திரு . சாந்தி பூசன் அவர்கள் அரசை ஏமாற்றிய செய்தி வெளியானது தான் தாமதம் .,  இந்த லேட்டஸ்ட் இந்தியன் தாத்தாவின் சாயம் வெளுக்க ஆரம்பித்து விட்டது என்று தான் சொல்லவேண்டும் .
 
 
 
 2010 ம் வருடம் அலஹாபாத்  நகரில் உள்ள சிவில் லைன் பகுதியில் உள்ள ஒரு பங்களாவை வாங்கிய விவகாரத்தில் தான் இந்தியன் தாத்தாவின் மூத்த சீடர் சிக்கி உள்ளார் .    " 84  ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்ட நிலம் மற்றும் அதின் மேல் உள்ள பங்களாவின் சந்தை மதிப்பு சுமார் 20  கோடி எனவும் அதற்கு 1 . 35  கோடி முத்திரை தாள் தீர்வை செலுத்த வேண்டும் எனவும் ..,  ஆனால் திரு பூசன் அவர்கள் இந்த பங்களாவின் மதிப்பு வெறும் 5 லட்சம் என்று பத்திரத்தில் குறிப்பிட்டு வெறும் 46 ஆயிரம் மாத்திரம் முத்திரை தீர்வை செலுத்தி உள்ளதால் திரு . சாந்தி பூசனுக்கு 27 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாகவும் ஒரு மாதத்திற்குள் முத்திரை தாள் தீர்வையுடன் சேர்த்து ரூபாய் 1 . 62  கோடியை அரசுக்கு செலுத்த வேண்டும்"  என முத்திரை தாள் உதவி ஆணையர் திரு . கே.பி. பாண்டே தெரிவித்துள்ளார்  ( நன்றி . தினகரன் ,  பக்கம் 8  , நாள் : ஜனவரி 7 , 2012 )
 
 
 இந்த கதையை படிக்க கொஞ்சம் அதிர்ச்சியாக உள்ளது அல்லவா ....?  எனக்கும் தான் .... எங்கள் ஊரில் பொதுவாக இப்படி பட்ட காரியங்களை சொல்லும் போது  " கருவாட்டிற்கு பூனை காவலா ...?"  என்று கேட்பது தான் நினைவிற்கு வருகிறது .
 
 
 நவீன இந்தியாவின் காந்தி என்று உங்களை அழைத்தார்களே ......! ஹசாரே தாத்தா ...... இப்பொழுது என்ன செய்ய போகிறீர்கள் ...? உங்கள் கருத்து படி திரு. பூசனை ஜெயிலுக்கு அனுப்ப நீங்கள் தயாரா ...? அல்லது உங்கள் ஊர் பழக்கத்தின் படி தண்டனை கொடுக்க முடியுமா ....?

ஊழல் கொடுமையான வியாதி என்பதிலும்  , அது சமூகத்தை விட்டு அறவே களையப்பட வேண்டும் என்பதிலும் நான் உறுதியாக நிற்கிறேன் .  ஆனால் தனி வாழ்வில் சுத்தம் இல்லாத ஆனால் பொது வாழ்வில் ஈடுபடும்  இந்த மாதிரி " காந்திக்களும்  ,  மகாத்மாக்களும் "  இனம் காணப்பட வேண்டும் என்பதும் ஊழலுக்கு எதிரான தனி மனித ஒழுக்கம் வளரவேண்டும் என்பதுமே இந்த இந்தியனின் ஆசை ....

No comments:

Post a Comment

நாகரீகமான கருத்துகள் பகிருங்கள் .... ஆக்கப்பூர்வமான கேள்விகள் கேளுங்கள் ... நன்றி