Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts

Saturday, 24 December 2016

நமது பிரதமர் கங்கையை போல தூய்மையானவர்.......!?

காங்கிரஸ் பொது செயலாளர் திரு. ராகுல் காந்தி,  பிரதமர் திரு. மோடி மீது அடுக்கடுக்கான ஊழல் குற்றசாட்டுகளை ஆதாரங்களுடன் கூறியதை நாம் அறிந்து இருக்கிறோம்.  அந்த குற்றசாட்டுகளுக்கு இன்று வரை பதில் தரப்படவில்லை. ஆனால் மத்திய அமைச்சர் திரு. ரவி சங்கர் பிரசாத் சொன்ன வார்த்தை தான் " நமது பிரதமர் கங்கையை போல தூய்மையானவர்..."

உண்மையிலே கங்கா நதி மிகவும் தூய்மையானதா.....? என்றால் அது மிக பெரும் ஒரு வேதனையை தான் கொடுக்கிறது...

இமையமலை சாரலில் பனிக்கட்டிகள் உருகி , தண்ணீர் ஓடிவரும் போது , வெள்ளி கோடுகள் இழைத்தது போல தூய்மையை கண்டு மெய் சிலிர்த்து போய் நின்று இருக்கிறேன்...பெரும்பாலும் எல்லா நதிகளும் உற்பத்தியாகி வருகிற இடத்தில் சுத்தமாக இருக்கிறதை நாம் அறிந்திருக்கிறோம்.....

ஆனால் அதே நதி இந்திய திரு கண்டத்தில் ஓடி வருகிற அவலம் இன்று கொடூரமானது.  மிகப் பெரிய அசுத்தமான நதிகளில் ஓன்று இந்த கங்கை நதியாக இருப்பதை கவனிக்கும் போது , நெஞ்சம் வலிக்கிறது.... மனித கழிவுகள் , மனித உடல்கள் , மற்றும் குப்பைகள் எல்லாம் சேர்ந்து இந்த கங்கையை அசுத்தமாக மாற்றி விட்டது...



இந்த அசுத்த கங்கையை சுத்தமாக்க பல முயற்சிகள் பல காலகட்டங்களில் அரசாங்கத்தினால் எடுக்கப்பட்டு வருகிறது.  ஆனாலும் இன்னும் சுத்தமானது போல தெரியவில்லை....

ஜனவரி 14 , 1986 ம் ஆண்டில் முன்னாள் பாரத பிரதமர் மாண்புமிகு ராஜீவ் காந்தி , இந்த கங்கையை சுத்திகரிக்கும் திட்டத்தை கையில் எடுத்தார். எடுத்தோம் , கவிழ்த்தோம் என்று இல்லாமல் , நீண்ட நெடிய தொலைநோக்கு பார்வையுடன் கங்கையில் கலக்கும் கழிவுகளை ( வீடுகள் மற்றும் தொழிற்சாலைகள் ) அகற்ற பல புதிய திட்டங்களை தீட்டி செயல்படுத்தினார்.  Ganga Action Plan என்ற பெயரில் பல காரியங்கள் நிறைவேற்றப்பட்டது.  

1985 ம் வருடம் முதல் 2௦௦௦ வருடம் வரை கிட்டத்தட்ட 1௦ பில்லியன் ரூபாய்கள் இந்த தூய்மை திட்டத்திற்காக செலவிடப்பட்டது. 

2௦ பெப்ரவரி 2௦௦9 ம் ஆண்டில் இந்திய பிரதமர் மாண்புமிகு மன்மோகன் சிங் அவர்களால் National River Ganga Basin Authority (NRGBA )   என்ற அமைப்பை தொடங்கி இந்திய தேசியத்தின் நதியாக கங்கை அறிவிக்கப்பட்டது.  2௦11 ம் வருடத்தில் மாண்புமிகு மன்மோகன் சிங் அவர்கள் முயற்சியினால் கங்கையை சுத்தப்படுத்த உலக வங்கியிடம் இருந்து 1 பில்லியன் டாலர் அளவில் உதவி பெறும் ஒப்புதல் பெறப்பட்டது.

1௦ ஜூலை 2௦14 ம் வருடத்தில் கங்கையை சுத்தபடுத்த நிதி அமைச்சர் திரு.அருண் ஜெட்லி 2௦37 கோடியை தனது பட்ஜெட்டில் அறிவித்தார்.  அடுத்த 5 வருடங்களில் இன்னும் 2௦௦௦௦ கோடி கங்கையை சுத்திகரிக்க பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது....

இந்திய தேசியத்தின் நதியான கங்கை வெகு விரைவில் சுத்திகரிக்கப்பட வேண்டும் என்பதே நமது விருப்பம்.  ஆனால் இவ்வளவு அழுக்கு நிறைந்த கங்கையை பிரதமரோடு ஒப்பிட்டு மத்திய அமைச்சர் பேசியது மாத்திரம் எனக்கு விளங்கவில்லை......

Friday, 16 December 2016

முதல்வன் பட இன்டர்வியூவும் , நிஜத்தில் ஒரு முதல்வரின் இன்டர்வியூவும்.....என்ன ஒற்றுமை...!

தமிழகத்தை ஒரு கலக்கு கலக்கிய படம் அர்ஜுன் நடித்த முதல்வன் படம்.  முதல்வருடன் நேரடி விவாதத்தில் அர்ஜுன் கேட்கும் சில கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் முதல்வர் தண்ணீர் குடிப்பார்..... அப்படி உண்மையிலே ஒரு முதல்வர் நமது நாட்டில் தண்ணீர் குடித்தார்...பாருங்களேன்.....!


மாண்புமிகு பாரத பிரதமர் அவர்கள் குஜராத் முதல்வராக இருந்தபோது CNN IBN நேரடி தொலைக்காட்சியில் கரன் தபார் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறிய காட்சி.....




நம்ம தமிழ்நாட்டு காரங்க படம் எடுக்கிற நிறைய விடயங்கள் இந்த காலத்தில் நடக்கிறது ஒரு ஆச்சரியம் தான் போங்க...!

Wednesday, 7 December 2016

ரமணா படத்திலே வரும் ஆஸ்பத்திரி எங்கே தெரியுமா...?


விஜயகாந்த் நடித்த ரமணா என்ற படத்தில் வரும் ஆஸ்பத்திரி காட்சி நான் மிகவும் ரசித்த காட்சி.... எனக்கென்னவோ இன்று அந்த காட்சி அதிகம் நினைவுக்கு வருவதால் , அந்த காட்சியை பகிருகிறேன்...பாருங்கள்...!


இந்த காட்சியில் வரும் ஒவ்வொரு நிகழ்வும் என் கண் முன்னால் நடப்பது போன்ற உணர்வு.....!

அந்த ஆஸ்பத்திரி எங்கே என்று உங்களுக்கு தெரியுமா....?


டிஸ்கி :- சத்தியமாக இந்த பதிவுக்கும் அப்......எல்.......ஒ க்கும் சம்பந்தம் இல்ல.....!

Monday, 5 December 2016

ஆனாலும் இவ்வளவு லொள்ளு ஆகாது.....!

பாரத பிரதமர் மாண்புமிகு மோடி அவர்கள் பணபரிவர்த்தனையை ஒழித்து காசில்லாத பொருளாதாரம் கொண்டு வர முயற்சிக்கிறார்.....அதன் முதல் கட்ட முயற்சியாக மதுரை தமிழன் தான் பயன்படுத்திய பொது கழிப்பிடத்திற்கு ரூபாய் 5 யை காசோலையாக வழங்கி உள்ளார்....




ஆனாலும் இவ்வளவு லொள்ளு ஆகாது தம்பி.....!

Sunday, 4 December 2016

நல்லதொரு குடும்பம் பல்கலைகழகம் - உண்மையாகுமா......!

குடும்பம் என்ற வார்த்தை நமது சமுதாயத்தின் ஆணிவேர் என்பதை யாரும் மறக்கமுடியாது. நாடு நன்றாக இருக்கவேண்டும் என்றால் , ஊர் நன்றாக இருக்கவேண்டும். ஊர் நன்றாக இருக்கவேண்டும் என்றால் , வீடு நன்றாக இருக்கவேண்டும். வீடு நன்றாக இருக்கவேண்டும் என்றால் குடும்பம் நன்றாக இருக்கவேண்டும்..

நல்லதொரு குடும்பம் பல்கலைகழகம் என்ற வரியை நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் உண்மையில் இன்றைய குடும்பங்கள் பல்கலைகழகங்களாக இருக்கிறதா என்பது மில்லியன் டஜன் கேள்வி. பணமும் , புகழும் , பட்டமும் மாத்திரம் குடும்பத்தை உயர்த்தும் என்று நினைத்தால் , அது தவறு.....!

நல்ல ஒரு குடும்பம் உருவாகவேண்டும் என்றால் , குடும்பத்தின் உறுப்பினர்களாகிய கணவன் , மனைவி , பிள்ளைகள் எப்படி வாழவேண்டும் என்று விவிலியம் கூறுவதை கொஞ்சம் பாருங்கள்....


கணவன் :

" புருஷர்களே உங்கள் மனைவிகளில் அன்புகூறுங்கள்" - எபே 5 : 25

தினம் ஒரு நான்கு முறையாவது அன்பான வார்த்தைகளை கூறலாமே..!
     நான் உன்னை நேசிக்கிறேன்...
     நான் ரொம்ப கொடுத்து வைத்தவன்.....
     இப்படி ஒரு மனைவி கிடைக்க என்ன தவம் செய்தேன்.....

" புருஷர்களே , உங்கள் மனைவிகளில் அன்புகூறுங்கள் , அவர்கள் மேல் கசந்து கொள்ளாதிருங்கள்..."  - கொலோ 3 : 19

கசப்பான வார்த்தைகள் மனதை காயப்படுத்திவிடும்.....கீழ்க்கண்ட வார்த்தைகள் இன்று குடும்பங்களில் சாதாரணம்....தவிர்க்கலாமே...!
     உன்னை கட்டினதுக்கு ஒரு எருமையை கட்டியிருக்கலாம் ...!
     உன்னால எனக்கு ஒரே வேதனை தான்....!

" புருஷர்களே , மனைவிக்கு செய்ய வேண்டிய கனத்தை செய்யுங்கள் " -  1 பேதுரு 3 : 7
     வெளியே போகும் போது , உங்கள் மனைவியையும் கூட்டிக்கொண்டு போங்கள்....அவர்களை மிகுந்த மரியாதையுடன் நடத்துங்கள்.....மற்றவர்களிடம் எனது மனைவி என்று பெருமையுடன் அறிமுகப்படுத்துங்கள்.....


மனைவி :-

" மனைவிகளே உங்கள் சொந்த புருஷருக்கு கீழ்படியுங்கள்...." - எபே 5:22

நமது குடும்பத்தில் மிஸ் ஆகிற பெரிய காரியம் இதுதான்....இது பெண்ணடிமை என்று வாதிடுவோர் உண்டு....பெண் அடிமை அல்ல ஆனால் ஒரு நல்ல மனைவி தன் புருஷனுக்கு உடனே கீழ்ப்படிந்தால் குடும்பத்தில் எவ்வளவு பிரச்சினைகள் வராமல் போய்விடும்.  வாக்குவாதங்களும் , தர்க்கங்களும் தானே நமது குடும்பத்தை சீரழிக்கிறது.....

"தகுதியான வஸ்திரத்தினாலும் , நாணத்தினாலும் , தெளிந்த புத்தியினாலும் , நற்கிரியைகளினாலும் தங்களை அலங்கரிக்கவேண்டும் " - 1 தீமோ 2 : 1௦

ஆகா....! எவ்வளவு அருமையான வரிகள்....எந்த பியூட்டி பார்லர் போய் கோடிகணக்கிலே கொட்டி அழகு செய்தாலும் , இந்த அழகுக்கு ஈடாகுமா....?.

பிள்ளைகள் :-

"பிள்ளைகளே உங்கள் பெற்றோருக்கு கீழ்படியுங்கள் " - எபே 6 : 1

பெற்றோர் எது சொன்னாலும் எதிர்த்து பேசுவது பிள்ளைகளின் வேலையாகிவிட்டது. நீங்களெல்லாம் Outdated என்று இன்றைய பிள்ளைகள் பெற்றோரை உதறி தள்ளுகிறார்கள்.  உங்களை பெற்று , படிக்கவைத்து , ஆளாக்கி அழகு பார்த்த பெற்றோருக்கு கீழ்ப்படிந்தால் , குடும்பம் எவ்வளவு அழகாக இருக்கும்.....


இப்படிப்பட்ட குடும்பம் பல்கலைகழகம் அல்லாமல் வேறென்ன....!  இந்த சமுதாயத்தில் நாம் இதை காண்போமா.....?

Friday, 10 May 2013

மதிப்பெண் என்ற எமன் - வேதனையான தகவல்


+2 தேர்வு முடிவுகள் கடந்த 09 05 2013 அன்று வெளியிடப்பட்டது .   மாநில மற்றும் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்கள் எடுத்தவர்கள் குறித்து பத்திரிகைகள் பரபரப்பு செய்திகள் வெளியிட்டுக்கொண்டு இருக்க , அதிகம் வெளிவராத சில வேதனையான செய்திகளை உள்ளடக்கியது தான் இந்த கட்டுரை .



போட்டிகள் மிகுந்த   உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்று பெரும்பான்மையான பெற்றோர்கள் நினைப்பதும் ,  தாங்கள் அடைய முடியாத கனவுகளை தங்கள் பிள்ளைகள் அடையவேண்டும் என்று ஆசைப்படுவதும் நியாயம் தான் .  ஆனால் அங்கு தான் அவர்களை அறியாமல் நெருக்கடியை உண்டாக்குகிறார்கள் என்பது தான் வேதனை உண்டாக்கும் விடயம் .



குறிப்பாக 10 வது வகுப்பு அல்லது +2 படிக்கும் குழந்தைகள் வீட்டில் பிள்ளைகளை விட பெற்றோர்கள் படும் பாடு தான் அதிகமாக இருக்கும் .   காரணம் மதிப்பெண் என்ற போட்டியில் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற ஆசை தான் 


சில பெற்றோர்கள் பிள்ளைகளை வெகுவாக நெருக்குவதால் , அவர்களின் எண்ணம் சிந்தனை எல்லாம் யோசித்து செயல்படுவதை விட்டு விட்டு இயந்திர ரீதியில் பாடங்களை படிக்கிறார்கள் .    இவ்வாறு செய்வது மதிப்பெண்களை தரும் என்றாலும் அறிவை மழுங்கடிக்கும் எனபதே உண்மை .   மாறாக பிள்ளைகளும் கடும் நெருக்கடிக்கு உள்ளாகிறார்கள் .  எனவே தான் தேர்வு முடிந்த பின்பு ,மதிப்பெண்களை எதிர்கொள்ளுவது கூட மாணவர்களால் முடியவில்லை 



இப்படி மன நெருக்கடியில் நாகர்கோயில் பகுதியில் ஒரு மாணவனும் , சிந்துஜா என்கிற மாணவியும் தற்கொலை செய்துகொண்டார்கள் என்று நாளேடுகளில் வாசிக்க நேர்ந்தது.  இன்னும் பல ஆயிரம் மாணவர்கள் ( மதிப்பெண் போட்டியில் பின் தங்கியவர்கள் ) இப்படி மன நெருக்கடியில் சிக்கி தான் உள்ளார்கள்


 அதிக மதிப்பெண்கள் பெற்றால் நல்ல பாடங்கள் எடுத்து படிக்க முடியும் என்பது உண்மை தான்.   ஆனால் மதிப்பெண்கள் எமனாக பிள்ளைகளை அழிக்கக்கூடாது .   வாழ்வதற்கும் , வளர்வதற்கும் அநேகம் வழிகள் இந்த உலகத்தில் இருக்கும் பொழுது , மதிப்பெண்களை காரணம் காட்டி , பிள்ளைகளை ஒடுக்குவதை தவிர்த்து ,  சந்தோஷ வாழ்க்கையின் முகடுகளை பக்குவமாய் எடுத்து கூறினால் இளைய தலைமுறை வளரும் என்பதில் சந்தேகம் இல்லை


Thursday, 8 March 2012

நிலம் இருக்கிறதா ...? - பத்திரப்படுத்தும் வழிகள்


நெடுங்கால நண்பர் ஒருவரை திடீரென சந்திக்க நேரிட்டது .   அநேக இடங்களில் நிலம் வாங்கி போட்டிருந்த அவர் மிகவும் சோகமாய் இருந்தார் .  காரணம் என்ன என்று கேட்ட பொழுது அவரின் அநேக நிலங்கள் நெடுங்காலம் கவனிக்காமல் விட்டதினால் அவரின் நிலங்கள் பறிபோகும் நிலையில் இருக்கும் சோக கதையை சொன்னார் .  உடனே இந்த பதிவு எழுதும் யோசனை தோன்றியது .
 
 
 
உங்கள் நிலங்களை நீங்கள் பாதுகாக்க கீழ்க்கண்ட யோசனைகளை கடை பிடியுங்கள்  :-


உங்கள் நிலங்களுக்கு உரிய வரியை ( நன்செய் / புன்செய் அல்லது வீட்டு வரி ) செலுத்தி வருகிறீர்களா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள் .  இல்லை எனில் வேறு யாராவது உங்கள் நிலத்திற்கு தீர்வை செலுத்தி வந்தால் , அதன் மூலம் கூட அவர்கள் நிலத்திற்கு சொந்தம் கொண்டாடும் உரிமை ஏற்பட்டு விடலாம் .
 
 

வரி சரியாக செலுத்தி ( சிட்டா ) கொண்டு இருந்தால் , அந்த நிலத்திற்கு பட்டா வாங்கி உள்ளீர்களா என்பதை நீங்கள் சரி பாருங்கள் .   சில பேர் நிலத்தை வேறு ஆட்களிடம் இருந்து வாங்கி இருப்பார்கள் . ஆனால் பட்டா மாற்றம் செய்து இருக்க மாட்டார்கள் .  பட்டா உங்களிடம் இல்லையா ...? உடனே தாலுகா அலுவலகம் சென்று கணினி பட்டா ( உங்கள் நிலத்தின் சர்வே நம்பர் கொடுத்து ) வாங்குங்கள் . 


பட்டா ஏற்க்கனவே , நீங்கள் வாங்கி இருந்தால் அதன் மாற்றங்களை அவ்வப்பொழுது http://taluk.tn.nic.in/eservicesnew/home.html வலைத்தளத்தில் சரி பார்த்து கொள்ளுங்கள் .  மாற்றம் ஏதும் இருப்பின் , உடனடி கவனம் தேவை .
 
 
சில பேர் , பட்டாவை வாங்கி பார்த்தால் , அந்த பட்டாவில் வேறு பயனாளிகள் பெயர் இருக்கும் . அப்படி இருந்தால் உடனடியாக பட்டாவில் பெயர் மாற்றம் செய்யவேண்டும் .  அப்படி பெயர் மாற்றம் செய்யும் முன் EC என்று சொல்லப்படும் வில்லங்க சான்றிதழ் வாங்கவேண்டும் .


வில்லங்க சான்றிதழ் தாலுகா அலுவலகத்தில் கிடைக்காது . ஆனால் சார்பதிவாளர் அலுவலகத்தில் உங்கள் நிலத்தின் சர்வே நம்பர் எழுதி மனு கொடுக்கவேண்டும் .  அப்படி கொடுக்கும் பொழுது உங்கள் பத்திரத்தின் தேதிக்கு முந்தைய 10 வருடங்களில் இருந்து தற்பொழுதைய வருடம் வரைக்கும் வில்லங்கம் பார்ப்பது நல்லது .
 
 
 வில்லங்க சான்றிதழ் எனப்படுவது உங்கள் நிலம் யாரால் யாருக்கு எந்த வருடம் எழுதி கொடுக்கப்பட்டது என்று அத்தனை விவரங்களும் உள்ளடக்கியதாக இருக்கும் .  உங்களுக்கு அந்த வில்லங்க சான்றிதழ் வாங்கிய பிறகு , உங்கள் பத்திர பதிவு நாளுக்கு பிறகு ஏதாவது பரிமாற்றம் உண்டாகி இருக்குமானால் அந்த பத்திரத்தின் நகலையும் நீங்கள் அந்த அலுவலகத்தில் தனியாக மனு கொடுத்து பெற்று கொள்ளலாம் .
 

வில்லங்க சான்றிதழ் உங்களின் பரிவர்தனையோடு முடிந்தது என்றால் , நீங்கள் அந்த நகலை கொண்டு உங்கள் பட்டாவின் பெயர் மாற்றத்திற்கு மனு கொடுக்கலாம் .
 
 
 ஒருவேளை உங்கள் காலம் சென்ற தந்தையார் நிலம் உங்கள் பெயர்க்கு மாற்றம் செய்யப்படவேண்டும் எனில் உங்கள் தந்தையாரின் இறப்பு சான்றிதழ் மற்றும் உங்கள் தந்தைக்கு வாரிசு சான்றிதழ் பெற்று அவைகளின் மூலம் பட்டாவை உங்கள் பெயருக்கு மாற்றம் செய்யலாம் .
 
 
கூடிய மட்டும் உங்களின் நிலங்களை வேலி அடைத்து பாதுகாப்பது நல்லது . 


உங்கள் நிலங்களின் சர்வே நம்பர் மற்றும் அளவுகளை ஏதாவது புத்தகத்தில் தொகுத்து வைத்து இருந்தால் , அவைகளை உங்கள் பிள்ளைகளுக்கு சொல்லி கொடுப்பதற்கு நலமாக இருக்கும் .  சில வீடுகளில் பிள்ளைகள் நிலம் எங்கே என்று தெரியாமல் நிற்பதும் வேடிக்கை தான் . 
 
 
 காசு கொடுத்து வாங்குகிறீர்கள் .... கொஞ்சம் கவனிக்கலாம் தானே ... உங்களுக்கு இந்த பதிவு பிரயோஜனமாய் இருந்தால் அடுத்த பதிவில் பட்டா பெயர் மாற்றம் செய்வதின் முறைகளை எழுத ஆசைப்படுகிறேன் ....

Monday, 5 March 2012

அம்மா அங்கே போ போ .... ! காக்கா இங்கே வா வா .....!


பல வருடங்களாக , பல மாதங்களாக எனது மனதை மிகவும் அரித்து கொண்டு இருந்த இந்த விடயம் இன்றும் இது சம்பந்தப்பட்ட விடயத்தை நேரில் பார்த்தவுடன் நொந்து போனதின் விளைவு தான் இந்த பதிவு ........



வயதான ஒரு தாயாருக்கு மூன்று பிள்ளைகள் . மிகவும் கஷ்டப்பட்டு அந்த பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கி , திருமணம் செய்வித்த உடன் பிள்ளைகள் எல்லாரும் , தனது வயதான தாயை விட்டு விட்டு தூர தேசத்திற்கு குடும்பத்தோடு வேலைக்கு சென்று விட்டார்கள் .  தாய் மிகவும் வயது முதிர்ந்து , நோய் வாய் பட்ட போதிலும் , பிள்ளைகளுக்கு வந்து பார்க்க நேரம் இல்லை .  யாரும் பொருட்படுத்தவும் இல்லை ....

 
இந்த நிலையில் அந்த வயதான தாய் இறந்து போனார்கள் .  மேள தாளம் , வேட்டுகளுடன் ( சீக்கிரம் போய் விட்டார் என்ற சந்தோசமா ....? ) இறுதி ஊர்வலமாய் கொண்டு செல்லப்பட்டு குடும்பத்தினர் முன்னிலையில் அடக்கம் செய்யப்பட்டார் ....


 இறந்து 15 ம நாள் நினைவு விழா , இன்று பிள்ளைகள் அனைவராலும் சிறப்புடன் கொண்டாடப்பட்டது .  தாயை அடக்கம் செய்த இடத்திற்கு வந்த பிள்ளைகள் , சில சம்பிராதய சடங்குகளை செய்த பின்பு , தாய்க்கு பிடித்த சில பலகாரங்களை கல்லறையில் படையலாக படைத்தனர் .  அதற்க்கு பிறகு தான் இந்த சம்பவம் நடைபெற்றது .

 
தாயின் கல்லறையில் இருந்து கொஞ்சம் உணவை எடுத்து கொண்டு கொஞ்ச தூரம் தள்ளி போய் கா கா என்று கத்த ஆரம்பித்து விட்டார்கள் .  அட ... என்ன இது என்று பார்க்கும் பொழுது  . அங்கிருந்த சில பெரிய ( ? ) நபர்கள் பேசிக்கொண்டார்கள் .  இந்த அம்மா ஏன் இன்னும் வந்து படையலை சாப்பிடவில்லை என்று .  அட .....! ஆமா .....! அந்த அம்மா காக்கா ரூபத்தில் வந்து சாப்பிடுவார்களாம் .....  பெரும் போராட்டத்திற்கு பிறகு ஒரு காக்கா வந்து ஒரு வாய் சாப்பிட்டதும் , அங்கிருந்தோர் முகத்தில் எல்லாம் என்ன ஒரு மகிழ்ச்சி ....!


அட ... பாவிகளா ...! 10 மாதம் சுமந்து பெத்த தாய் நோயில் கிடக்கும் பொழுது வந்து பார்பதற்கு நாதியில்லை  , அந்த தாயின் கடைசி நிமிடத்தில் கூட உணவளிப்பதற்கு யாரும் வரவில்லை .  இப்பொழுது காக்காவை கூப்பிடுகிறார்களாம் .....! என்ன கொடுமை .....

அம்மா நீ போ ...போ......!   காக்கா இங்கே வா.....வா......


Friday, 17 February 2012

மாண்புமிகு சங்கரன்கோவில் வாக்காள பெருமக்களே ..............


தமிழக அரசு எந்திரத்தின் எல்லா துறைகளும் இப்பொழுது சங்கரன்கோவிலை தான் சுற்றி சுற்றி வருகின்றன .  முன்னாள் கால்நடை துறை அமைச்சர் திரு . கருப்பசாமி புற்று நோயால் மரித்த பிறகு ,  இடைதேர்தல் அவரின் தொகுதியில் அறிவிக்கப்பட்டு இருப்பதே அந்த பரபரப்புக்கு காரணம் .  மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களும் , மாண்புமிகு தமிழக எதிர்க்கட்சி தலைவர் அவர்களும் காரசாரமாக சட்டசபையில் மோதி கொண்டதும் , அனைவரின் கவனத்தையும் இந்த தொகுதியின் பால் ஈர்த்திருக்கிறது .
 
 
 
 சங்கரன்கோவில் இடைதேர்தலில் 5  முனை போட்டி நிலவ போகிறது .  அதிமுக , திமுக ,  தேதிமுக , மதிமுக மற்றும் பாஜக போன்ற கட்சிகள் தேர்தலில் தங்கள் வேட்பாளரை நிறுத்த உள்ளது .  இவர்களில் யாரை MLA ஆக தேர்ந்தெடுக்க போகிறார்கள் , மாண்புமிகு சங்கரன்கோவில் வாக்காள பெருமக்கள் என்பதை கொஞ்சம் அலசி பார்க்கலாம் ..
 
 
 பாஜக -  இந்த தேர்தலில் வேட்பாளரை அறிவித்து இருப்பது கொஞ்சம் ஆச்சரியம் தான் .  ஏன் எனில் மத்திய மற்றும் மாநில பாஜக நிர்வாகிகள் அதிமுக கட்சிக்கும் எங்களுக்கும் கொள்கை அளவில் ஒற்றுமை இருப்பதாகவும் , கூட்டணிக்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் சொல்லி கொள்ளும் நிலையில் பாஜக வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளது அதிமுக வுக்கு எதிரான வாக்குகளை சிதற செய்யும் நோக்கம் என்பதை நாம் மறுக்க முடியாது .
 

மதிமுக  -  இந்த கட்சியின் நிலை என்ன என்பதை நினைத்து மக்களே கொஞ்சம் குழம்பி போய் தான் உள்ளார்கள் . காரணம் பஸ் கட்டணம் , பால் விலை உயர்த்தப்பட்ட பொழுது மாபெரும் போராட்டம் ஒன்றை நடத்த போகிறேன் என்று சவால் விட்டவர் , அம்மாவுக்கு பயந்தோ என்னவோ சவாலை காற்றிலே பறக்க விட்டு விட்டார் .  இவர் எப்படி சங்கரன்கோவிலை காப்பாற்றுவார் என்ற எண்ணத்தினால் புரட்சி புயலுக்கு வாய்ப்பு கொஞ்சம் குறைவு தான் .
 
 

தேதிமுக :  இந்த கட்சியின் மிக பெரிய பலமே அதன் தலைவர் தான் .  அதே போல மிக பெரிய பலவீனமும் அவர் தான் .  சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்த புதிதில் அவரை ஆதரித்த அநேகர் அவரின் அரசியல் பேச்சுகளை கண்டு ( ? ) ஒதுங்கியுள்ளனர் .   சட்டசபையில் வீராவேசமாக பேசிய திரு . விஜயகாந்த் , அம்மாவின் சவாலுக்கு ( சங்கரன்கோவில் ஜெயிக்க முடியுமா ..?)  நேரடியாக சவால் விடாமல் , கவர்னர் ஆட்சி இருந்தால் ( எப்படியும் வராது என்ற தைரியம் ) போட்டியிட தயார் என்று அறிவித்ததில் இருந்து சங்கரன்கோவிலில் அவரால் முடியாது என்ற நிலைக்கு வந்துள்ளார் என்பதை அறிய முடிகிறது .
 
 

திமுக :  திமுக தலைவர் அவர்களின் இரு புதல்வர்களினால் கட்சியின் நிலைப்பாடே ஆட்டம் கண்டிருக்கிற இந்த நிலையில் ,  இந்த இடை தேர்தலில் எப்படியும் வெற்றி பெறுவோம் என்று அஞ்சா நெஞ்சன்  அழகிரி தெரிவித்து  இருக்கிறார் .. ஆனாலும் தொடர்ச்சியாக திமுக கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் ஜெயிலுக்கு போய் கொண்டு இருப்பதால் , தொகுதி வேலையை பார்ப்பதில் கொஞ்சம் தொய்வு இருக்கும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை .



அதிமுக  :  தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே வேட்பாளரை அறிவித்து தேர்தல் பணிகளை கவனிப்பதற்காக 26 அமைச்சர்கள் உள்ளடக்கிய குழு ஒன்றையும் இந்த கட்சி அறிவித்து உள்ளது . ( அமைச்சர்களுக்கு வேறு வேலை இல்லையா என்று நீங்கள் கேட்ககூடாது ) .  சங்கரன்கோவில் மாண்புமிகு வாக்காளர்களை கவர்வதற்காக அரசின் இலவச திட்டங்கள் , மிக்சி ,  Grinder எல்லாம் ஏற்கனவே கொடுக்கப்பட்டு விட்டது ( அப்போ ... மின்சாரம் என்று கேட்கக்கூடாது ) .  இந்த இடை தேர்தல் அரசின் மானப் பிரச்சினை  என்பதால் அனைத்து வழிகளையும் பின்பற்றி வெற்றி என்ற முனைப்போடு களம் கண்டுள்ளது ...
 
 
மாண்புமிகு வாக்காளர்களின் நிலை என்னவாய் இருக்கும் என்று யோசித்து பார்த்தால் கொஞ்சம் வேடிக்கையாக தான் இருக்கிறது .
  •  அதிமுகவை தவிர யார் வெற்றி பெற்றாலும் சட்டசபையில் உட்கார கூடமுடியாது  என்பதை மக்கள் அறிந்து உள்ளார்கள் .
  • சாத்தான்குளத்தை தேவன்குளமாக மாற்றுவோம் என்ற வாக்குறுதி என்ன ஆயிற்று என்பதயும் மக்கள் அறிந்து உள்ளார்கள் .
  • தேர்தல் தேதி 18 ( 1 + 8 = 9 ) , அட ஆமாங்க ...அம்மாவின் ராசி தேதி . எப்படி தான் இப்படி எல்லாம் தேர்தல் கமிசன் கூட யோசித்து தேதி அறிவிக்கிறார்களோ என்று கூட குரல் எழும்புகிறது ...
  
அட ... முடிவு தான் என்னய்யா ...? என்று நீங்கள் கேட்டால் ... கிடைப்பதை                ( ? .....!  )  வாங்கி கொண்டு மீண்டும் ஆளும் கட்சிக்கே வாய்ப்பளிக்க தீர்மானம் செய்வது தான் சரியான வழி என்று தான் நினைக்கிறார்கள் .  எப்படியும் இந்த MLA வும் சட்டசபையில் போய் மேஜையை மாத்திரம் தட்டுவார் என்பதை அறிந்த பிறகும் .....
 

Thursday, 16 February 2012

ஆசிரியர் மாணவர் உறவு - சீர் குலைகிறதா - ஒரு பார்வை


சமீப காலமாக ஆசிரியர் மாணவர்கள் இடையே நடக்கும் விடயங்கள் மனதை உலுக்குவதாக உள்ளது .  சென்னையில் ஒரு ஆசிரியை பட்டபகலில் ஒரு மாணவனால் கத்தியால் குத்தி கொல்லப்பட்டார் .  இன்றைய நாளேடுகளின் மூலம் , ஆசிரியர் அடித்தால் ஒரு மாணவன் தூக்கு போட்டு இறந்த செய்தியை அறிந்தேன் .  ஒரு பக்கம் மாணவர்கள் ஆசிரியர்களையும் , மறுபக்கம் ஆசிரியர்கள பாதுகாப்பற்ற சூழ்நிலை என்று மாணவர்களையும் குறை சொல்ல ,  உண்மையில் ஆசிரியர் - மாணவர் உறவு எப்படித்தான் உள்ளது என்று யோசித்து பார்த்தேன் .. இந்த பதிவை எழுதுகிறேன் 




மாதா , பிதா , குரு , தெய்வம்  என்று ஆசிரியர்களை தெய்வத்திற்கு முன்பு வைத்து சொல்லப்பட்டிருக்கிற தமிழ் மொழியினை நாம் அறிவோம் .  வீட்டில் தாய் , தந்தையுடன் கழிக்கும் அதே அளவு பொழுதை மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களுடனும் கழிக்கிறார்கள் .  8 மணி நேரம் பள்ளியில் ஆசிரியர்களுடனும் , 8 மணி நேரம் தூக்கத்திலும் , மீதி 8 மணி நேரம் வீட்டில் பெற்றோர்களுடனும் மாணவர்கள் கழிக்கிறார்கள் .  எனவே பெற்றோரை போலவே ஆசிரியர்களும் முக்கியமானவர்கள் என்பதற்காகவோ என்னவோ அவர்கள் தெய்வத்திற்கு முன்பு வைக்கப்பட்டனர் .



நாங்கள் பள்ளியில் படிக்கும் பொழுது எங்களுக்கு இருந்த ஆசிரியர்கள் ,  பெற்றோரை போலவே எங்களை பார்த்து கொண்டார்கள் என்றால் அது மிகையல்ல .   அன்பிலும் ,  கண்டிப்பிலும் , கவனிப்பிலும் ,  ஆரோக்கியத்திலும் .... எல்லாவற்றிலும் ஆசிரியர்கள் பள்ளியில் ஒரு பெற்றோர் போலதான் .  எனக்கு நன்றாக நியாபகம் இருக்கிறது .  எனது முதல் வகுப்பு ஆசிரியை ( தற்பொழுது மறைந்து விட்டார்கள் ) மாணவர்களை மடியில் வைத்து தான் அ , ஆ  எழுத சொல்லி தந்தார்கள் .   யாருக்காவது  உடல் நலம் சரி இல்லாமல் போனால் , தோளில் தூக்கி வைத்து அரவணைத்து இருக்கிறாகள் .  அவர்களை பார்க்கும் பொது எங்களுக்கு பயம் வந்தது இல்லை ஆனால் மரியாதை கலந்த ஒரு வித உணர்வு இருக்கும் .  ஏன் எனில் ஆசிரியர்கள் பணியை தொழிலாக செய்யாமல் சேவையாக செய்து வாழ்ந்தார்கள் .


ஆனால் இன்றைய அநேகம் ஆசிரியர்கள் ஆசிரிய பணியை சேவையாக செய்யாமல் தொழிலாக செய்கிறார்களோ என்ற சந்தேகம் எனக்கு வருகிறது .   அன்று எந்த பிரதி பலனும் எதிர்பாராமல் மாணவர்களுக்கு சேவை செய்த ஆசிரியர்கள் எங்கே .? இன்று பள்ளிக்கு பெயர் வாங்கவேண்டும் என்ற நோக்கத்திற்காகவே  ( மாணவர்கள் பெயர் வாங்கவேண்டும் என்ற நோக்கத்திற்கு அல்ல ) ஆசிரிய தொழிலில் மாணவர்களை நடத்தும் பள்ளிகள் எங்கே ....?


நான் சொல்லுவது கொஞ்சம் வித்தியாசமாக தோன்றலாம் .  ஆம் ... அன்று அரசு பள்ளிகளில் தான் பிள்ளைகள் படித்தார்கள் . எந்த கட்டணமும் செலுத்த தேவை இல்லை .  ஆனால் ஒழுக்கமும் , கண்டிப்பும்  தாராளமாக இருந்தது .  ஆனால் இன்று புற்றீசல் போல தனியார் பள்ளிகள் பெருகி இருக்கின்றன .  மதிப்பெண் என்ற ஒரே காரணத்திற்க்காக ஆசிரியர் , மாணவர் என்ற உறவு சீரானதாய் இராமல்  , அன்பு கலந்த கண்டிப்பு இராமல் , அக்கறையற்ற தண்டனைகள் பெருகுவதால் தான் இப்படி சம்பவங்கள் நிகழ்கிறதோ என்ற ஆதங்கம் எனக்கு ....



இன்றைய நாளேட்டில் ஒரு காரியத்தை பார்த்தேன் .  ஒரு 80 வயது ஆசிரியர் , கடுமையான் உடல் நோயினால் பாதிக்கப்பட்டும்  , என் உயிர் போகும் வரை என் கையில் சாக் பீஸ்  இருக்கும் என்று சொல்லி உள்ளார் . அவரது இளமை காலத்தில் அவரது சேவையினால் உயர்ந்த மாணவர்கள் என்று அவரை சந்தித்து தங்கள் நன்றி கடனை செலுத்தினார்களாம்.  அதில் ஒருவர் அந்த ஆசிரியர் வீட்டிலே தங்கி இருந்த படித்து உள்ளாரர் .  இந்த மாதிரி பெருந்தன்மையுள்ள , தன்னலமற்ற  , சேவை மனப்பான்மை உள்ள ஆசிரியர்களை மனமார வணங்கும் நான் அதே நேரத்தில் மற்றவர்களை தாழ்மையுடன் வேண்டுகிறேன் , "  ஆசிரிய பணி தொழில அல்ல அது ஒரு சேவை .... ஒரு நாட்டின் தூண்கள் உங்கள் கைகளில் தான் .  அவர்கள் தவறு செய்தாலும் , அன்புடன் நல்வழி படுத்தும் பொறுப்பும் கடமையும் உங்களுடையதே ....."

Saturday, 11 February 2012

ஒய் திஸ் கொலைவெறி - ஒரு பார்வை

சென்னையில் சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் தமிழ்நாட்டையே ஒரு உலுக்கு உலுக்கி விட்டது .  9 ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவன் தனது ஆசிரியை கத்தியால் 14 தடவை குத்தி கொலை செய்திருக்கிறான் .  இந்த செய்தி என்னை மிகவும் பாதித்து விட்டது .  உடனடியாக ஒரு பதிவு எழுத முற்பட்டேன் . ஆனால் சமயம் வாய்க்காததினால் கொஞ்சம் பிந்தி விட்டது .


வளரும் இந்தியாவின் மிக பெரிய தூண்கள் என்று அழைக்கப்படும் மாணவ சமுதாயம் இந்த நாட்களில் போகும் பாதை சரிதானா ...? என்ற கேள்வி எங்கும் தொனிக்கிறது ....  மாணவர்கள் TV பார்க்கிறார்கள்  , கொலை , குத்து போன்றவற்றை சினிமாவில் பார்க்கிறார்கள் ... அதனால் தான் கேட்டு போகிறார்கள் என்று ஒரு பொதுவான கருது வைக்கப்பட்டாலும் , இந்த இளம் சமுதாயத்தை தவறான பாதையில் நாம் தான் வழிநடத்துகிறோம் என்ற உண்மையை நாம் அறிந்தால் அதிர்ச்சியாக தான் இருக்கும் ...


சமீப காலமாக தமிழ்நாட்டில் நடக்கும் எந்த போராட்டங்களிலும் , மாணவ செல்வங்களை அதிகமாக காண முடிகிறது . இது ஒரு ஆணித்தரமான உண்மை .  கூட்டம் அதிகம் சேர வேண்டும் என்ற காரணத்தினாலோ அல்லது மனித கேடயம் போல அவர்களை பயன்படுத்தி கொள்ளலாம் என்ற காரணத்தினாலோ மாணவர்களை அதிகமாக பயன்படுத்துகிறார்கள் .  ஆனால் யாரும் இதை கண்டுகொள்ளுவதில்லை என்பது தான் வேதனையிலும் வேதனை .


நீங்களே யோசித்து பாருங்கள் ... பள்ளி சென்று , கற்று , ஒழுக்கத்தையும் கீழ்படிதலையும் பெற்று சமுதாயத்தின் தூண்களாய் மாற வேண்டிய இளம் குருத்துகள் , தவறான மனிதர்களால் போதிக்கப்பட்டு , தவறான கொள்கைகள் கற்பிக்கப்பட்டு , கற்று தரவேண்டிய காரியங்கள் இழந்து போய் , சீரழிக்கப்பட்டு வருகின்றனர் .   ஒரு வேளை இது பார்ப்பதற்கு அருமையாக இருக்கலாம் .  ஆனால் இந்த சமுதாய சீரழிவு வெளிச்சத்திற்கு வரும் பொழுது , அதன் முடிவு பரிதாபமாக இருக்கும் .


சமீபத்தில் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு விரோதமாக மக்களை போராட தூண்டும் கூட்டம் குறி வைத்து இருப்பதும் இந்த மாணவர்களை தான் என்பது தான் எனது எண்ணம் .  எந்த போராட்டமாய் இருந்தாலும் , மாணவர்களை முன்னாள் நடக்க சொல்லும் , இந்த கயவர்கள் , இந்த நாளைய தலைமுறையின் சீரழிவுக்கு பொறுப்பு ஏற்பார்களா என்றால் இல்லை ..... நான் சொல்லும் காரியம் ஒரு அபாண்டமாய் தோன்றலாம் .. ஆனால் உண்மை அநேக நேரங்களில் கசக்க தான் செய்யும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இருக்கமுடியாது ..


இந்த இந்தியனின் கோரிக்கை ஒன்றே ஓன்று தான் ... நீங்கள் இந்த வளரும் சமுதாயத்திற்கு நல்லது செய்யவில்லை என்றால் கூட பரவாயில்லை , இவர்கள் வாழ்வு மாத்திரமல்லாமல் , இந்திய குடியரசின் எதிர்காலத்தையே நாசமாக்கும் வழிகளில் இவர்களை நடத்தாது இருங்கள் என்பதே .....

Sunday, 5 February 2012

கல்யாண் ஜூவல்லர்ஸ் - புரட்சி போராட்டம் - இது எப்படி இருக்கு ...?


அன்னா ஹசாரே போராட்டம் என்று ஒன்றை ஆரம்பித்தாலும் ஆரம்பித்தார்  ,  இந்தியா முழுவதும் போராட்டம் என்ற வார்த்தை பரவ தொடங்கி விட்டது .  அதிலும் சமீப காலமாக கல்யாண் ஜூவல்லர்ஸ் தங்களது நகை கடை விளம்பரதிற்க்காக புரட்சி போராட்டம் என்ற பெயரில் தொலைக்கட்சிகளில் விளம்பரம் கொடுக்கிறது .  அதாங்க ... நம்ம பிரபு வருவாரே ......! அதே தான் ....




கல்யாண் ஜூவல்லர்ஸ் இந்தியா முழுவதும் நான்கு மாநிலங்களில் சுமார் 26 நகை கடைகளை கொண்டு இயங்கி வருகிறது .  அதிகபட்சமாக தமிழகத்தில் சுமார் 13 இடங்களில் அதன் கிளைகள் உள்ளது .  சரி அதனால் என்ன ...? என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது ..   காரணம் இருக்கிறது  



செய்கூலி , சேதாரம் எல்லாம் மிக குறைந்த விலையில் நகைகள் விற்கப்படும் என்ற விளம்பரத்தை முன் வைத்துள்ள கல்யாண் ஜூவல்லர்ஸ் இந்தியாவிலே முதன்முறையாக நகை நிறுவனங்களில் சொந்தமாக விமானம் வாங்கியுள்ளது .  பிரேசில் நாட்டில் தயாரிக்கப்பட்ட Emperor நிறுவன தயாரிப்பான பெனாம் 100  என்ற விமானத்தின் விலை 30 கோடி எனப்படுகிறது .   இன்சூரன்ஸ் , பராமரிப்பு , பைலட் ஊதியம் மற்றும் அலுவலக செலவுகள் சேர்த்து வருடத்திற்கு சுமார் 2 . 5 கோடி செலவாகுமாம் .  ஒரு மணி நேரம் பறக்க சுமார் 50000 ரூபாய் செலவாகுமாம் ...


எனது கேள்வி என்னவெனில் ...... விலை குறைத்து தருகிறோம் என்று சொல்லுகிற நகை நிறுவனம் சொந்த விமானம் வாங்குகிற அளவுக்கு வருமானம் பார்க்கிறது என்றால் அதன் விளம்பரத்தில் உண்மை இருக்கிறதா அல்லது கல்யாண் நிறுவனத்தை விட விலை கூடுதலாக விற்கும் நிறுவனங்களுக்கு அதை விட பல மடங்கு லாபம் வருகிறதா ...?  என்பது தான் 


கல்யாணப் பேச்சை எடுத்தாலே 100 பவுன் என்று இருந்தால்  , இவர்கள் விமானம் என்ன கொஞ்ச நாளில் கப்பலே வாங்கி விடுவார்கள் என்று யாரோ கேட்கிறது போல தெரிகிறது .  கல்யாணம் என்றால் தங்கத்தை பார்க்காதீர்கள் .... தங்க குணம் கொண்ட பெண்களை பாருங்கள் .....