Tuesday, 13 December 2016

தமிழக அரசியல் குழப்பம் - பாஜக வின் பங்கு - ஒரு அலசல்....

மாண்புமிகு தமிழக முன்னாள் முதல்வர் காலமான பிறகு தமிழக மக்கள் கிரகிக்க முடியாத அளவுக்கு தமிழக அரசியல் குழப்பங்கள் அதிகரித்து உள்ளது.... அதிமுக என்ற கட்சியின் அமைச்சர்களும் , MLAக்களுமே செய்வதறியாமல் பேசி வருகிறார்கள். ஆனால் நடக்கிற சம்பவங்களை பார்க்கும் போது , இவையெல்லாம் ஒரு நீண்ட நாள் திட்டமிடல் போல தோன்றுகிறது.

பாரத பிரதமர் மாண்புமிகு மோடி அவர்களுக்கு மாண்புமிகு அம்மா அவர்களுக்கும் இடையில் கொள்கை ரீதியிலும் சரி அரசியல் ரீதியிலும் சரி நல்ல உறவு இருந்தது என்று தான் நாம் சொல்லமுடியும்.  "எங்கள் தனிப்பட்ட உறவு மிகச் சிறந்த முறையில் இருக்கிறது " என்று பிரதமர் அவர்களே பத்திரிகையாளர்களிடம் சொல்லி உள்ளதை நாம் அறிவோம். தகவல் : http://www.thehindu.com/news/national/tamil-nadu/i-have-excellent-personal-relations-with-jayalalitha-modi/article5919668.ece.

2௦15 ம் வருடத்தில் ஆகஸ்ட் மாதம் 7 ம் தேதியில் தேசிய கைத்தறி தினத்தையொட்டி நடந்த விழாவில் பங்கேற்க வந்த பிரதமர் , போயஸ் கார்டன் சென்று அம்மாவை சந்தித்து பேசியதையும் நாம் அறிந்திருக்கிறோம்.


செப்டம்பர் 22 , 2௦16 அன்று மாண்புமிகு அம்மா அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிற்பாடு பாரத பிரதமர் அம்மா அவர்களை அக்டோபர் 16 வரை பார்க்க வரவில்லை.  ராகுல் காந்தி முதலிய தேசிய தலைவர்கள் அப்போல்லோ வந்து சென்ற பிறகு தமிழக பாஜக தலைவர் திரு. பொன் ராதாகிருஷ்ணன் பேசும்போது , பிரதமர் சீக்கிரம் வந்து பார்ப்பார் என்று அறிவித்தார். மாத்திரமல்ல இந்தியாவில் இருக்கும் அனைத்து தலைவர்களிலும் அம்மா மீது நட்பும் பாசமும் வைத்திருப்பது நமது பிரதமர் அவர்கள் தான் என்றார்.  காணொளி கீழே இணைத்துள்ளேன்.


அப்படி இருக்கும் போது மாண்புமிகு அம்மா அவர்களை அவர்கள் இறக்கும் நேரம் வரை அப்போல்லோ வந்து பிரதமர் பார்க்காதது ஏன்...? என்பது ஒரு அசைக்கமுடியாத கேள்வி.

அக்டோபர் மாதத்தில் தமிழக தலைவர்கள் / மக்கள் எல்லாரும் அம்மாவின் உடல்நிலை குறித்து கவனம் செலுத்தவேண்டும் என்று கோரிக்கை விடுத்தபோது கூட மத்திய அரசின் கவனம் இந்த விசயத்தில் செலுத்தப்படாதது எப்படி என்பது மில்லியன் டாலர் கேள்வி.

ஒரு மாநில முதல்வர் காலமானால் , மிஞ்சி போனால் ஒரு இரண்டு நாளுக்குள்ளாக ஒரு இடைகால முதல்வரை நியமிப்பார்கள். ஆனால் அம்மா இறந்த அதே இரவே ஒரு அமைச்சரவை பதவி ஏற்றது எனக்கு தெரிந்து எந்த வரலாற்றிலும் இடம் பெறாத ஒரு விடயம்....

மாண்புமிகு அம்மா தமிழக மக்களுக்காக வைத்து போன கோடிக்கணக்கான சொத்துகள் ( மக்களால் நான் ...மக்களுக்காக நான் என்றதால் நான் இப்படி எழுதுகிறேன் ) நிமிடத்தில் கைமாற வேண்டுமெனில் ஒரு நாளைக்குள் நடக்கிற விடயமா....?

ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் சில திரை மறைவு வேலைகள் நடந்திருக்கும் என்று சந்தேகப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. தமிழகத்தின் முதல்வராக மாண்புமிகு ஒபிஎஸ் அவர்கள் இரண்டு முறை இருந்தாலும் , அம்மா அவர்களின் அரசியல் வாரிசாக அவர்கள் நியமிக்கப்படவில்லை. மாத்திரமல்ல சமீப காலங்களில் சில முக்கியமான பொறுப்புகளில் இருந்து திரு. ஒபிஎஸ் விளக்கி வைக்கப்பட்டு இருந்தார் என்பதை தமிழ்நாடே அறியும்....இப்படி இருக்க திரு. ஒபிஎஸ் அவர்களே முதல்வராக தெரிவு செய்யப்பட்டது அநேகரின் புருவத்தை உயர்த்தியது.

ஒருவேளை இந்த பதவி ஏற்கும் நிகழ்வு அம்மா மறைந்து சில வாரங்கள் கடந்து நடந்திருந்தால் , தமிழகத்தின் ஆட்சியே மாறி இருந்தாலும் ஆச்சரியப்பட முடியாது. ஒபிஎஸ் யின் தலைமையை விரும்பாத MLAகள் திமுக வுடன் சேர்ந்து விட கூட வாய்ப்புண்டு. ஆனால் இவை அனைத்தையும் முறியடிக்க ஒரே வழி இரவே பதவி ஏற்பது......இது யாருடைய திட்டமாக இருக்கும் என்பது நமக்கு புரியாதது அல்ல...!

ஒபிஎஸ் ஒரு திறமையான முதல்வரா என்றால் , நான் சொல்லுவதை விட அவர் அவையில் பேசியதை கீழே கொடுத்திருக்கிறேன் , நீங்களே பார்த்து முடிவு செய்யுங்கள் 



இப்படிப்பட்ட முதல்வரை தமிழகத்தில் தேர்வு செய்ய காரணங்கள் என்ன என்றெல்லாம் நாம் விவாதிக்க இறங்கினால் , பல காரியங்களை கண்டு கொள்ளலாம்.

·         காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசை கண்டிப்பாக நிர்பந்தம் செய்ய தற்கால தமிழக அரசால் முடியாது..
·         மீனவர் மீது துப்பாக்கி சூடு நடத்துவதை தடுக்காத மத்திய அரசை கண்டிப்பாக தற்கால அரசு கண்டிக்காது..
·         GST போன்ற மசோதாக்களை நிறைவேற்றுவதில் இதுவரை சுணக்கம் காட்டி வந்த தமிழக அரசு , சீக்கிரம் அதை நிறைவேற்றும்.

மொத்தத்தில் எடுப்பார் கைப்பிள்ளையாக ஒரு மாநில அரசாங்கம் மத்திய அரசிடம் இருக்கும். அம்மாவின் இறுதி சடங்கில் ஐயா என்னை கைவிட்டுறாதீங்க என்ற வகையில் திரு. ஒபிஎஸ் கதறுவதும் , நான் இருக்கேன் என்ற விதத்தில் பிரதமர் அவரை கட்டி அணைத்ததும் , தமிழக முதல்வர் தேர்வில் பாஜக இருக்கிறது என்று நம்பதான் தோன்றுகிறது.


தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் சினிமா நடிகர்களை முன்னிறுத்தி அரசியல் செய்வதால் ( இது தமிழனின் விதி ) , கௌதமி மாண்புமிகு பிரதமர் அவர்களை சந்தித்து வந்ததும் தமிழக அரசியலில் பாஜக வின் காய் நகர்த்துதலில் ஒன்றாக இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. 

அதிமுக வை சேர்ந்த 5௦ MP கள் ( மக்களவை & மாநிலங்களவை ) டெல்லியில் இருப்பதால் , அவர்களை டெல்லியிலே தக்கவைக்க அதிமுக மத்திய அமைச்சரவையில் சேர்க்கபட்டால் ஆச்சரியம் இல்லை.

தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் சினிமா நடிகர்களை முன்னிறுத்தி அரசியல் செய்வதால் ( இது தமிழனின் விதி ) , கௌதமி மாண்புமிகு பிரதமர் அவர்களை சந்தித்து வந்ததும் தமிழக அரசியலில் பாஜக வின் காய் நகர்த்துதலில் ஒன்றாக இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. 

ரஜினி போன்ற நடிகர்களை தங்களுக்கு  புகழாரம் சூட்டுவதற்கும் பாஜக அவரை பயன்படுத்தி கொள்ளும். இனி வரும் காலங்களில் ரஜினியின் புகழுரையை நாம் அடிக்கடி கேட்கலாம்.

இதெல்லாம் எதற்க்காக என்று நமக்கு கேட்க தோன்றலாம். ஒன்றே ஓன்று தான் இருக்கமுடியும்.  இந்த 5 வருட காலத்தில் பலவீனமான அதிமுக ஆட்சியை பயன்படுத்தி பாஜக வை தமிழகத்தில் வளர்க்கலாம் என்பது தான் பிரதானமான திட்டமாய் இருக்கும்.  அதற்காக அவ்வப்போது கருப்பு பண ஒழிப்பு போன்ற மாயையான திட்டங்கள் வந்தால் வியப்பில்லை.

தமிழகத்தின் பிரதான கட்சி திமுக சும்மா இருக்குமா என்று கேட்டால் சும்மா இருக்காது தான்.  ஆனால் அதை அடக்கி வைப்பதற்கு சில வழக்குகள் தொடரப்பட்டாலும் ஆச்சரியம் இல்லை. கலாநிதி மற்றும் தயாநிதி மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதை நாம் கவனிக்காமல் விட முடியாது.

மொத்தத்தில் தமிழகம் விழித்தால் நல்லது அல்லது வெகு சீக்கிரத்தில் மாயையில் மாளும் நாள் இல்லை என்பது தான் இந்த இந்தியனின் கருத்து.




தமிழக அரசியல் குழப்பம் - பாஜகவின் பங்கு....! ஒரு கட்டுரை.....

தமிழக அரசியல் குழப்பத்தில் பாஜக வின் பங்கு எப்படி இருந்து இருக்க வாய்ப்பு உள்ளது.  ஒரு விரிவான அரசியல் அலசல்....

Monday, 12 December 2016

மோடி ஜீ..... எங்க வயிறு எரியுது.....!

பிரதமர் அவர்களே......! ஒரு திட்டமிடலும் இல்லாமல் 1௦௦௦ ரூபாய் மற்றும் 5௦௦ ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்து 2௦௦௦ ரூபாய் நோட்டுகளை களத்தில் இறக்கி விட்டீர்கள்....!



நீங்க சந்தோசமா இருக்கீங்க....நாளுக்கு நாள் ஒரு அறிக்கை விடுறீங்க...! நாடாளுமன்றத்திலே பேச மாட்டீங்க....! ஆனா மங்கி பாத்ல மட்டும் பேசுவீங்க...உங்க குடிமக்கள் நிலை தெரியுமா....?

ஒரு வங்கியிலும் 1௦௦ ரூபாய் நோட்டுகள் இல்லை ஐயா....! ரோசா பூ கலர்ல 2௦௦௦ ரூபாய் நோட்டை கொடுக்கிறாங்க.....!

2௦௦௦ ரூபாய் நோட்டை பார்த்தால் , எவனும் பொருள் தரமாட்டேங்குறான்....ஹோட்டல் போய் சாப்பிட முடியல.....ஒரு கிலோ பழம் வாங்க முடியல.....வயிறு பசிக்குது ஐயா....! துரித உணவகம் போய் கேட்டால் , சில்லரை இருக்கா என்று தான் முதலில் கேட்கிறான்.  பேப்பர் காரனுக்கு பைசா கொடுக்கமுடியவில்லை....பால்கார அம்மாவுக்கு பைசா கொடுக்கமுடியவில்லை......பிள்ளைகளுக்கு சாப்பிட முட்டாய் வாங்க முடியவில்லை.....

நீங்க பெரிசா அறிமுகப்படுத்தின 2௦௦௦ ரூபாய் என் பாக்கெட்டில் இருக்கு...ஆனா என் வயிறு எரியுது.....!  இந்த சாபம் உங்களை விடாது.....

Wednesday, 7 December 2016

ரமணா படத்திலே வரும் ஆஸ்பத்திரி எங்கே தெரியுமா...?


விஜயகாந்த் நடித்த ரமணா என்ற படத்தில் வரும் ஆஸ்பத்திரி காட்சி நான் மிகவும் ரசித்த காட்சி.... எனக்கென்னவோ இன்று அந்த காட்சி அதிகம் நினைவுக்கு வருவதால் , அந்த காட்சியை பகிருகிறேன்...பாருங்கள்...!


இந்த காட்சியில் வரும் ஒவ்வொரு நிகழ்வும் என் கண் முன்னால் நடப்பது போன்ற உணர்வு.....!

அந்த ஆஸ்பத்திரி எங்கே என்று உங்களுக்கு தெரியுமா....?


டிஸ்கி :- சத்தியமாக இந்த பதிவுக்கும் அப்......எல்.......ஒ க்கும் சம்பந்தம் இல்ல.....!

Monday, 5 December 2016

ஜோசியம் பொய்.....! அம்மா மறைந்தார்...!

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் உடல்நலக் குறைவினால் அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது , தமிழகத்தின் தலை சிறந்த ஜோதிடர்கள் அம்மா குணமடைந்து சீக்கிரம் திரும்புவார் என்று கூறினர்....



அவர்கள் உரைத்த ஜோதிடத்தை தந்தி தொலைக்காட்சி கூட ஒளிபரப்பியது.  அக்டோபர் மாதம் 2 ம் தேதி ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியின் தொகுப்பு இதோ கீழே.....





ஜோசியம் பொய்த்து விட்டது....தமிழகத்தின் இரும்பு மனுஷி அம்மா காலமானார்கள்......

இனியாவது ஜோசியத்தை நம்பும் கூட்டம் குறையுமா.....?

ஆனாலும் இவ்வளவு லொள்ளு ஆகாது.....!

பாரத பிரதமர் மாண்புமிகு மோடி அவர்கள் பணபரிவர்த்தனையை ஒழித்து காசில்லாத பொருளாதாரம் கொண்டு வர முயற்சிக்கிறார்.....அதன் முதல் கட்ட முயற்சியாக மதுரை தமிழன் தான் பயன்படுத்திய பொது கழிப்பிடத்திற்கு ரூபாய் 5 யை காசோலையாக வழங்கி உள்ளார்....




ஆனாலும் இவ்வளவு லொள்ளு ஆகாது தம்பி.....!

Sunday, 4 December 2016

நல்லதொரு குடும்பம் பல்கலைகழகம் - உண்மையாகுமா......!

குடும்பம் என்ற வார்த்தை நமது சமுதாயத்தின் ஆணிவேர் என்பதை யாரும் மறக்கமுடியாது. நாடு நன்றாக இருக்கவேண்டும் என்றால் , ஊர் நன்றாக இருக்கவேண்டும். ஊர் நன்றாக இருக்கவேண்டும் என்றால் , வீடு நன்றாக இருக்கவேண்டும். வீடு நன்றாக இருக்கவேண்டும் என்றால் குடும்பம் நன்றாக இருக்கவேண்டும்..

நல்லதொரு குடும்பம் பல்கலைகழகம் என்ற வரியை நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் உண்மையில் இன்றைய குடும்பங்கள் பல்கலைகழகங்களாக இருக்கிறதா என்பது மில்லியன் டஜன் கேள்வி. பணமும் , புகழும் , பட்டமும் மாத்திரம் குடும்பத்தை உயர்த்தும் என்று நினைத்தால் , அது தவறு.....!

நல்ல ஒரு குடும்பம் உருவாகவேண்டும் என்றால் , குடும்பத்தின் உறுப்பினர்களாகிய கணவன் , மனைவி , பிள்ளைகள் எப்படி வாழவேண்டும் என்று விவிலியம் கூறுவதை கொஞ்சம் பாருங்கள்....


கணவன் :

" புருஷர்களே உங்கள் மனைவிகளில் அன்புகூறுங்கள்" - எபே 5 : 25

தினம் ஒரு நான்கு முறையாவது அன்பான வார்த்தைகளை கூறலாமே..!
     நான் உன்னை நேசிக்கிறேன்...
     நான் ரொம்ப கொடுத்து வைத்தவன்.....
     இப்படி ஒரு மனைவி கிடைக்க என்ன தவம் செய்தேன்.....

" புருஷர்களே , உங்கள் மனைவிகளில் அன்புகூறுங்கள் , அவர்கள் மேல் கசந்து கொள்ளாதிருங்கள்..."  - கொலோ 3 : 19

கசப்பான வார்த்தைகள் மனதை காயப்படுத்திவிடும்.....கீழ்க்கண்ட வார்த்தைகள் இன்று குடும்பங்களில் சாதாரணம்....தவிர்க்கலாமே...!
     உன்னை கட்டினதுக்கு ஒரு எருமையை கட்டியிருக்கலாம் ...!
     உன்னால எனக்கு ஒரே வேதனை தான்....!

" புருஷர்களே , மனைவிக்கு செய்ய வேண்டிய கனத்தை செய்யுங்கள் " -  1 பேதுரு 3 : 7
     வெளியே போகும் போது , உங்கள் மனைவியையும் கூட்டிக்கொண்டு போங்கள்....அவர்களை மிகுந்த மரியாதையுடன் நடத்துங்கள்.....மற்றவர்களிடம் எனது மனைவி என்று பெருமையுடன் அறிமுகப்படுத்துங்கள்.....


மனைவி :-

" மனைவிகளே உங்கள் சொந்த புருஷருக்கு கீழ்படியுங்கள்...." - எபே 5:22

நமது குடும்பத்தில் மிஸ் ஆகிற பெரிய காரியம் இதுதான்....இது பெண்ணடிமை என்று வாதிடுவோர் உண்டு....பெண் அடிமை அல்ல ஆனால் ஒரு நல்ல மனைவி தன் புருஷனுக்கு உடனே கீழ்ப்படிந்தால் குடும்பத்தில் எவ்வளவு பிரச்சினைகள் வராமல் போய்விடும்.  வாக்குவாதங்களும் , தர்க்கங்களும் தானே நமது குடும்பத்தை சீரழிக்கிறது.....

"தகுதியான வஸ்திரத்தினாலும் , நாணத்தினாலும் , தெளிந்த புத்தியினாலும் , நற்கிரியைகளினாலும் தங்களை அலங்கரிக்கவேண்டும் " - 1 தீமோ 2 : 1௦

ஆகா....! எவ்வளவு அருமையான வரிகள்....எந்த பியூட்டி பார்லர் போய் கோடிகணக்கிலே கொட்டி அழகு செய்தாலும் , இந்த அழகுக்கு ஈடாகுமா....?.

பிள்ளைகள் :-

"பிள்ளைகளே உங்கள் பெற்றோருக்கு கீழ்படியுங்கள் " - எபே 6 : 1

பெற்றோர் எது சொன்னாலும் எதிர்த்து பேசுவது பிள்ளைகளின் வேலையாகிவிட்டது. நீங்களெல்லாம் Outdated என்று இன்றைய பிள்ளைகள் பெற்றோரை உதறி தள்ளுகிறார்கள்.  உங்களை பெற்று , படிக்கவைத்து , ஆளாக்கி அழகு பார்த்த பெற்றோருக்கு கீழ்ப்படிந்தால் , குடும்பம் எவ்வளவு அழகாக இருக்கும்.....


இப்படிப்பட்ட குடும்பம் பல்கலைகழகம் அல்லாமல் வேறென்ன....!  இந்த சமுதாயத்தில் நாம் இதை காண்போமா.....?