Saturday 24 December 2016

நமது பிரதமர் கங்கையை போல தூய்மையானவர்.......!?

காங்கிரஸ் பொது செயலாளர் திரு. ராகுல் காந்தி,  பிரதமர் திரு. மோடி மீது அடுக்கடுக்கான ஊழல் குற்றசாட்டுகளை ஆதாரங்களுடன் கூறியதை நாம் அறிந்து இருக்கிறோம்.  அந்த குற்றசாட்டுகளுக்கு இன்று வரை பதில் தரப்படவில்லை. ஆனால் மத்திய அமைச்சர் திரு. ரவி சங்கர் பிரசாத் சொன்ன வார்த்தை தான் " நமது பிரதமர் கங்கையை போல தூய்மையானவர்..."

உண்மையிலே கங்கா நதி மிகவும் தூய்மையானதா.....? என்றால் அது மிக பெரும் ஒரு வேதனையை தான் கொடுக்கிறது...

இமையமலை சாரலில் பனிக்கட்டிகள் உருகி , தண்ணீர் ஓடிவரும் போது , வெள்ளி கோடுகள் இழைத்தது போல தூய்மையை கண்டு மெய் சிலிர்த்து போய் நின்று இருக்கிறேன்...பெரும்பாலும் எல்லா நதிகளும் உற்பத்தியாகி வருகிற இடத்தில் சுத்தமாக இருக்கிறதை நாம் அறிந்திருக்கிறோம்.....

ஆனால் அதே நதி இந்திய திரு கண்டத்தில் ஓடி வருகிற அவலம் இன்று கொடூரமானது.  மிகப் பெரிய அசுத்தமான நதிகளில் ஓன்று இந்த கங்கை நதியாக இருப்பதை கவனிக்கும் போது , நெஞ்சம் வலிக்கிறது.... மனித கழிவுகள் , மனித உடல்கள் , மற்றும் குப்பைகள் எல்லாம் சேர்ந்து இந்த கங்கையை அசுத்தமாக மாற்றி விட்டது...



இந்த அசுத்த கங்கையை சுத்தமாக்க பல முயற்சிகள் பல காலகட்டங்களில் அரசாங்கத்தினால் எடுக்கப்பட்டு வருகிறது.  ஆனாலும் இன்னும் சுத்தமானது போல தெரியவில்லை....

ஜனவரி 14 , 1986 ம் ஆண்டில் முன்னாள் பாரத பிரதமர் மாண்புமிகு ராஜீவ் காந்தி , இந்த கங்கையை சுத்திகரிக்கும் திட்டத்தை கையில் எடுத்தார். எடுத்தோம் , கவிழ்த்தோம் என்று இல்லாமல் , நீண்ட நெடிய தொலைநோக்கு பார்வையுடன் கங்கையில் கலக்கும் கழிவுகளை ( வீடுகள் மற்றும் தொழிற்சாலைகள் ) அகற்ற பல புதிய திட்டங்களை தீட்டி செயல்படுத்தினார்.  Ganga Action Plan என்ற பெயரில் பல காரியங்கள் நிறைவேற்றப்பட்டது.  

1985 ம் வருடம் முதல் 2௦௦௦ வருடம் வரை கிட்டத்தட்ட 1௦ பில்லியன் ரூபாய்கள் இந்த தூய்மை திட்டத்திற்காக செலவிடப்பட்டது. 

2௦ பெப்ரவரி 2௦௦9 ம் ஆண்டில் இந்திய பிரதமர் மாண்புமிகு மன்மோகன் சிங் அவர்களால் National River Ganga Basin Authority (NRGBA )   என்ற அமைப்பை தொடங்கி இந்திய தேசியத்தின் நதியாக கங்கை அறிவிக்கப்பட்டது.  2௦11 ம் வருடத்தில் மாண்புமிகு மன்மோகன் சிங் அவர்கள் முயற்சியினால் கங்கையை சுத்தப்படுத்த உலக வங்கியிடம் இருந்து 1 பில்லியன் டாலர் அளவில் உதவி பெறும் ஒப்புதல் பெறப்பட்டது.

1௦ ஜூலை 2௦14 ம் வருடத்தில் கங்கையை சுத்தபடுத்த நிதி அமைச்சர் திரு.அருண் ஜெட்லி 2௦37 கோடியை தனது பட்ஜெட்டில் அறிவித்தார்.  அடுத்த 5 வருடங்களில் இன்னும் 2௦௦௦௦ கோடி கங்கையை சுத்திகரிக்க பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது....

இந்திய தேசியத்தின் நதியான கங்கை வெகு விரைவில் சுத்திகரிக்கப்பட வேண்டும் என்பதே நமது விருப்பம்.  ஆனால் இவ்வளவு அழுக்கு நிறைந்த கங்கையை பிரதமரோடு ஒப்பிட்டு மத்திய அமைச்சர் பேசியது மாத்திரம் எனக்கு விளங்கவில்லை......

Wednesday 21 December 2016

தவறான திட்டமிடல் - வங்கி பணியாளர்கள் போர்க்கொடி...- வலுக்கும் எதிர்ப்பு....

5௦௦ ரூபாய் மற்றும் 1௦௦௦ ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அரசாங்கம் அறிவித்தபோதே , இது பயனில்லா அறிவிப்பு என்றும் சரியான திட்டமிடல் இல்லாமல் செயல்படுத்தப்படும் அறிவிப்பு என்றும் பல பதிவுகள் எழுதியுள்ளேன்..

சில நண்பர்களிடம் விவாதிக்கும் போது , டிசம்பர் 3௦ ம் தேதி எல்லாம் சரியாகிவிடும் என்று மாண்புமிகு பிரதமர் உறுதி அளித்துள்ளார் என்று மாறி மாறி சொன்னார்கள்.  இன்னும் 1௦ நாள் தான் இருக்கிறது,...ஆனால் நாடு மிக மோசமான நிலைக்கு போகிறதை தான் நாம் பார்க்கமுடிகிறது....

இந்த நிலையில் தான் வருகிற 28 மற்றும் 29 தேதிகளில் போராட்டம் செய்யபோவதாக அகில இந்திய வங்கி பணியாளர்கள் கூட்டமைப்பும் , அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பும் தெரிவித்து உள்ளது... இந்த போராட்ட அறிவிப்புக்கு இவர்கள் கொடுக்கும் காரணம் மிக ஏற்புடையதே....


  • மக்களின் தேவைகளை சந்திக்கும் வகையில் , போதுமான அளவு பணம் ரிசர்வ் வங்கியால் அனைத்து வங்கிகளுக்கும் அனுப்பப்படவேண்டும்.  போதுமான அளவு பணம் கையில் இருக்கிறது என்று நிதி அமைச்சர் கூறுகிறார்....போதுமான நிதி கையில் இருந்தால் , அதை வங்கிகளுக்கு கொடுப்பது தானே நியாயம்

  • ரிசர்வ் வங்கியால் போதுமான அளவு பணம் கொடுக்க முடியாவிட்டால் , வங்கியின் பண பரிவர்த்தனைகள் ரத்து செய்யப்படவேண்டும்.

  • அன்றாட வாழ்வின் போராட்டங்களுக்காக மணிக்கணக்கில் ஏன் நாள்க்கணக்கில் வரிசையில் நின்று பணம் கிடைக்காத போது , பொது மக்களுக்கு கோபம் வந்து வங்கி பணியாளர்களுக்கு பாதுகாப்பின்மை நிலவுகிறது. போதிய பாதுகாப்பு கொடுக்கவேண்டும்.

  • நவம்பர் 8 முதல் இந்நாள் வரை இரவு பகல் உழைத்த அதிக நேரத்திற்கு கூலி கொடுக்கவேண்டும்.

  • நாடு முழுவதும் அதிகப்படியான புதிய நோட்டுகள் பிடிபடுவதாக தகவல் வருவதை குறித்து சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.
கடைசி கருத்து ரொம்ப யோசிக்கவேண்டி உள்ளது.....வங்கி பணியாளர்கள் கூட்டமைப்பு இப்படி வெளிப்படையாக சிபிஐ விசாரணை வேண்டும் என்று சொல்லுவதால் , இந்த புதிய 2௦௦௦ ரூபாய் நோட்டுகள் உண்மையிலே வங்கி வந்து தான் செல்லுகிறதா...? இல்லை நேரடியாக ரிசர்வ் வங்கியில் இருந்தே செல்லுகிறதா....?

அடுத்த தேர்தலில் மக்கள் அளிக்கும் பதிலடியை பார்க்கும் வரை , நிதி அமைச்சரும் சரி  , பிரதம அமைச்சரும் சரி , நாட்டை ஒரு வழி பண்ணாமல் விடமாட்டார்கள் என்று தான் தெரிகிறது....டிசம்பர் 3௦ வரை பொறுப்போம்....

Friday 16 December 2016

முதல்வன் பட இன்டர்வியூவும் , நிஜத்தில் ஒரு முதல்வரின் இன்டர்வியூவும்.....என்ன ஒற்றுமை...!

தமிழகத்தை ஒரு கலக்கு கலக்கிய படம் அர்ஜுன் நடித்த முதல்வன் படம்.  முதல்வருடன் நேரடி விவாதத்தில் அர்ஜுன் கேட்கும் சில கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் முதல்வர் தண்ணீர் குடிப்பார்..... அப்படி உண்மையிலே ஒரு முதல்வர் நமது நாட்டில் தண்ணீர் குடித்தார்...பாருங்களேன்.....!


மாண்புமிகு பாரத பிரதமர் அவர்கள் குஜராத் முதல்வராக இருந்தபோது CNN IBN நேரடி தொலைக்காட்சியில் கரன் தபார் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறிய காட்சி.....




நம்ம தமிழ்நாட்டு காரங்க படம் எடுக்கிற நிறைய விடயங்கள் இந்த காலத்தில் நடக்கிறது ஒரு ஆச்சரியம் தான் போங்க...!

Tuesday 13 December 2016

தமிழக அரசியல் குழப்பம் - பாஜக வின் பங்கு - ஒரு அலசல்....

மாண்புமிகு தமிழக முன்னாள் முதல்வர் காலமான பிறகு தமிழக மக்கள் கிரகிக்க முடியாத அளவுக்கு தமிழக அரசியல் குழப்பங்கள் அதிகரித்து உள்ளது.... அதிமுக என்ற கட்சியின் அமைச்சர்களும் , MLAக்களுமே செய்வதறியாமல் பேசி வருகிறார்கள். ஆனால் நடக்கிற சம்பவங்களை பார்க்கும் போது , இவையெல்லாம் ஒரு நீண்ட நாள் திட்டமிடல் போல தோன்றுகிறது.

பாரத பிரதமர் மாண்புமிகு மோடி அவர்களுக்கு மாண்புமிகு அம்மா அவர்களுக்கும் இடையில் கொள்கை ரீதியிலும் சரி அரசியல் ரீதியிலும் சரி நல்ல உறவு இருந்தது என்று தான் நாம் சொல்லமுடியும்.  "எங்கள் தனிப்பட்ட உறவு மிகச் சிறந்த முறையில் இருக்கிறது " என்று பிரதமர் அவர்களே பத்திரிகையாளர்களிடம் சொல்லி உள்ளதை நாம் அறிவோம். தகவல் : http://www.thehindu.com/news/national/tamil-nadu/i-have-excellent-personal-relations-with-jayalalitha-modi/article5919668.ece.

2௦15 ம் வருடத்தில் ஆகஸ்ட் மாதம் 7 ம் தேதியில் தேசிய கைத்தறி தினத்தையொட்டி நடந்த விழாவில் பங்கேற்க வந்த பிரதமர் , போயஸ் கார்டன் சென்று அம்மாவை சந்தித்து பேசியதையும் நாம் அறிந்திருக்கிறோம்.


செப்டம்பர் 22 , 2௦16 அன்று மாண்புமிகு அம்மா அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிற்பாடு பாரத பிரதமர் அம்மா அவர்களை அக்டோபர் 16 வரை பார்க்க வரவில்லை.  ராகுல் காந்தி முதலிய தேசிய தலைவர்கள் அப்போல்லோ வந்து சென்ற பிறகு தமிழக பாஜக தலைவர் திரு. பொன் ராதாகிருஷ்ணன் பேசும்போது , பிரதமர் சீக்கிரம் வந்து பார்ப்பார் என்று அறிவித்தார். மாத்திரமல்ல இந்தியாவில் இருக்கும் அனைத்து தலைவர்களிலும் அம்மா மீது நட்பும் பாசமும் வைத்திருப்பது நமது பிரதமர் அவர்கள் தான் என்றார்.  காணொளி கீழே இணைத்துள்ளேன்.


அப்படி இருக்கும் போது மாண்புமிகு அம்மா அவர்களை அவர்கள் இறக்கும் நேரம் வரை அப்போல்லோ வந்து பிரதமர் பார்க்காதது ஏன்...? என்பது ஒரு அசைக்கமுடியாத கேள்வி.

அக்டோபர் மாதத்தில் தமிழக தலைவர்கள் / மக்கள் எல்லாரும் அம்மாவின் உடல்நிலை குறித்து கவனம் செலுத்தவேண்டும் என்று கோரிக்கை விடுத்தபோது கூட மத்திய அரசின் கவனம் இந்த விசயத்தில் செலுத்தப்படாதது எப்படி என்பது மில்லியன் டாலர் கேள்வி.

ஒரு மாநில முதல்வர் காலமானால் , மிஞ்சி போனால் ஒரு இரண்டு நாளுக்குள்ளாக ஒரு இடைகால முதல்வரை நியமிப்பார்கள். ஆனால் அம்மா இறந்த அதே இரவே ஒரு அமைச்சரவை பதவி ஏற்றது எனக்கு தெரிந்து எந்த வரலாற்றிலும் இடம் பெறாத ஒரு விடயம்....

மாண்புமிகு அம்மா தமிழக மக்களுக்காக வைத்து போன கோடிக்கணக்கான சொத்துகள் ( மக்களால் நான் ...மக்களுக்காக நான் என்றதால் நான் இப்படி எழுதுகிறேன் ) நிமிடத்தில் கைமாற வேண்டுமெனில் ஒரு நாளைக்குள் நடக்கிற விடயமா....?

ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் சில திரை மறைவு வேலைகள் நடந்திருக்கும் என்று சந்தேகப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. தமிழகத்தின் முதல்வராக மாண்புமிகு ஒபிஎஸ் அவர்கள் இரண்டு முறை இருந்தாலும் , அம்மா அவர்களின் அரசியல் வாரிசாக அவர்கள் நியமிக்கப்படவில்லை. மாத்திரமல்ல சமீப காலங்களில் சில முக்கியமான பொறுப்புகளில் இருந்து திரு. ஒபிஎஸ் விளக்கி வைக்கப்பட்டு இருந்தார் என்பதை தமிழ்நாடே அறியும்....இப்படி இருக்க திரு. ஒபிஎஸ் அவர்களே முதல்வராக தெரிவு செய்யப்பட்டது அநேகரின் புருவத்தை உயர்த்தியது.

ஒருவேளை இந்த பதவி ஏற்கும் நிகழ்வு அம்மா மறைந்து சில வாரங்கள் கடந்து நடந்திருந்தால் , தமிழகத்தின் ஆட்சியே மாறி இருந்தாலும் ஆச்சரியப்பட முடியாது. ஒபிஎஸ் யின் தலைமையை விரும்பாத MLAகள் திமுக வுடன் சேர்ந்து விட கூட வாய்ப்புண்டு. ஆனால் இவை அனைத்தையும் முறியடிக்க ஒரே வழி இரவே பதவி ஏற்பது......இது யாருடைய திட்டமாக இருக்கும் என்பது நமக்கு புரியாதது அல்ல...!

ஒபிஎஸ் ஒரு திறமையான முதல்வரா என்றால் , நான் சொல்லுவதை விட அவர் அவையில் பேசியதை கீழே கொடுத்திருக்கிறேன் , நீங்களே பார்த்து முடிவு செய்யுங்கள் 



இப்படிப்பட்ட முதல்வரை தமிழகத்தில் தேர்வு செய்ய காரணங்கள் என்ன என்றெல்லாம் நாம் விவாதிக்க இறங்கினால் , பல காரியங்களை கண்டு கொள்ளலாம்.

·         காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசை கண்டிப்பாக நிர்பந்தம் செய்ய தற்கால தமிழக அரசால் முடியாது..
·         மீனவர் மீது துப்பாக்கி சூடு நடத்துவதை தடுக்காத மத்திய அரசை கண்டிப்பாக தற்கால அரசு கண்டிக்காது..
·         GST போன்ற மசோதாக்களை நிறைவேற்றுவதில் இதுவரை சுணக்கம் காட்டி வந்த தமிழக அரசு , சீக்கிரம் அதை நிறைவேற்றும்.

மொத்தத்தில் எடுப்பார் கைப்பிள்ளையாக ஒரு மாநில அரசாங்கம் மத்திய அரசிடம் இருக்கும். அம்மாவின் இறுதி சடங்கில் ஐயா என்னை கைவிட்டுறாதீங்க என்ற வகையில் திரு. ஒபிஎஸ் கதறுவதும் , நான் இருக்கேன் என்ற விதத்தில் பிரதமர் அவரை கட்டி அணைத்ததும் , தமிழக முதல்வர் தேர்வில் பாஜக இருக்கிறது என்று நம்பதான் தோன்றுகிறது.


தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் சினிமா நடிகர்களை முன்னிறுத்தி அரசியல் செய்வதால் ( இது தமிழனின் விதி ) , கௌதமி மாண்புமிகு பிரதமர் அவர்களை சந்தித்து வந்ததும் தமிழக அரசியலில் பாஜக வின் காய் நகர்த்துதலில் ஒன்றாக இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. 

அதிமுக வை சேர்ந்த 5௦ MP கள் ( மக்களவை & மாநிலங்களவை ) டெல்லியில் இருப்பதால் , அவர்களை டெல்லியிலே தக்கவைக்க அதிமுக மத்திய அமைச்சரவையில் சேர்க்கபட்டால் ஆச்சரியம் இல்லை.

தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் சினிமா நடிகர்களை முன்னிறுத்தி அரசியல் செய்வதால் ( இது தமிழனின் விதி ) , கௌதமி மாண்புமிகு பிரதமர் அவர்களை சந்தித்து வந்ததும் தமிழக அரசியலில் பாஜக வின் காய் நகர்த்துதலில் ஒன்றாக இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. 

ரஜினி போன்ற நடிகர்களை தங்களுக்கு  புகழாரம் சூட்டுவதற்கும் பாஜக அவரை பயன்படுத்தி கொள்ளும். இனி வரும் காலங்களில் ரஜினியின் புகழுரையை நாம் அடிக்கடி கேட்கலாம்.

இதெல்லாம் எதற்க்காக என்று நமக்கு கேட்க தோன்றலாம். ஒன்றே ஓன்று தான் இருக்கமுடியும்.  இந்த 5 வருட காலத்தில் பலவீனமான அதிமுக ஆட்சியை பயன்படுத்தி பாஜக வை தமிழகத்தில் வளர்க்கலாம் என்பது தான் பிரதானமான திட்டமாய் இருக்கும்.  அதற்காக அவ்வப்போது கருப்பு பண ஒழிப்பு போன்ற மாயையான திட்டங்கள் வந்தால் வியப்பில்லை.

தமிழகத்தின் பிரதான கட்சி திமுக சும்மா இருக்குமா என்று கேட்டால் சும்மா இருக்காது தான்.  ஆனால் அதை அடக்கி வைப்பதற்கு சில வழக்குகள் தொடரப்பட்டாலும் ஆச்சரியம் இல்லை. கலாநிதி மற்றும் தயாநிதி மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதை நாம் கவனிக்காமல் விட முடியாது.

மொத்தத்தில் தமிழகம் விழித்தால் நல்லது அல்லது வெகு சீக்கிரத்தில் மாயையில் மாளும் நாள் இல்லை என்பது தான் இந்த இந்தியனின் கருத்து.




தமிழக அரசியல் குழப்பம் - பாஜகவின் பங்கு....! ஒரு கட்டுரை.....

தமிழக அரசியல் குழப்பத்தில் பாஜக வின் பங்கு எப்படி இருந்து இருக்க வாய்ப்பு உள்ளது.  ஒரு விரிவான அரசியல் அலசல்....

Monday 12 December 2016

மோடி ஜீ..... எங்க வயிறு எரியுது.....!

பிரதமர் அவர்களே......! ஒரு திட்டமிடலும் இல்லாமல் 1௦௦௦ ரூபாய் மற்றும் 5௦௦ ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்து 2௦௦௦ ரூபாய் நோட்டுகளை களத்தில் இறக்கி விட்டீர்கள்....!



நீங்க சந்தோசமா இருக்கீங்க....நாளுக்கு நாள் ஒரு அறிக்கை விடுறீங்க...! நாடாளுமன்றத்திலே பேச மாட்டீங்க....! ஆனா மங்கி பாத்ல மட்டும் பேசுவீங்க...உங்க குடிமக்கள் நிலை தெரியுமா....?

ஒரு வங்கியிலும் 1௦௦ ரூபாய் நோட்டுகள் இல்லை ஐயா....! ரோசா பூ கலர்ல 2௦௦௦ ரூபாய் நோட்டை கொடுக்கிறாங்க.....!

2௦௦௦ ரூபாய் நோட்டை பார்த்தால் , எவனும் பொருள் தரமாட்டேங்குறான்....ஹோட்டல் போய் சாப்பிட முடியல.....ஒரு கிலோ பழம் வாங்க முடியல.....வயிறு பசிக்குது ஐயா....! துரித உணவகம் போய் கேட்டால் , சில்லரை இருக்கா என்று தான் முதலில் கேட்கிறான்.  பேப்பர் காரனுக்கு பைசா கொடுக்கமுடியவில்லை....பால்கார அம்மாவுக்கு பைசா கொடுக்கமுடியவில்லை......பிள்ளைகளுக்கு சாப்பிட முட்டாய் வாங்க முடியவில்லை.....

நீங்க பெரிசா அறிமுகப்படுத்தின 2௦௦௦ ரூபாய் என் பாக்கெட்டில் இருக்கு...ஆனா என் வயிறு எரியுது.....!  இந்த சாபம் உங்களை விடாது.....

Wednesday 7 December 2016

ரமணா படத்திலே வரும் ஆஸ்பத்திரி எங்கே தெரியுமா...?


விஜயகாந்த் நடித்த ரமணா என்ற படத்தில் வரும் ஆஸ்பத்திரி காட்சி நான் மிகவும் ரசித்த காட்சி.... எனக்கென்னவோ இன்று அந்த காட்சி அதிகம் நினைவுக்கு வருவதால் , அந்த காட்சியை பகிருகிறேன்...பாருங்கள்...!


இந்த காட்சியில் வரும் ஒவ்வொரு நிகழ்வும் என் கண் முன்னால் நடப்பது போன்ற உணர்வு.....!

அந்த ஆஸ்பத்திரி எங்கே என்று உங்களுக்கு தெரியுமா....?


டிஸ்கி :- சத்தியமாக இந்த பதிவுக்கும் அப்......எல்.......ஒ க்கும் சம்பந்தம் இல்ல.....!

Monday 5 December 2016

ஜோசியம் பொய்.....! அம்மா மறைந்தார்...!

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் உடல்நலக் குறைவினால் அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது , தமிழகத்தின் தலை சிறந்த ஜோதிடர்கள் அம்மா குணமடைந்து சீக்கிரம் திரும்புவார் என்று கூறினர்....



அவர்கள் உரைத்த ஜோதிடத்தை தந்தி தொலைக்காட்சி கூட ஒளிபரப்பியது.  அக்டோபர் மாதம் 2 ம் தேதி ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியின் தொகுப்பு இதோ கீழே.....





ஜோசியம் பொய்த்து விட்டது....தமிழகத்தின் இரும்பு மனுஷி அம்மா காலமானார்கள்......

இனியாவது ஜோசியத்தை நம்பும் கூட்டம் குறையுமா.....?

ஆனாலும் இவ்வளவு லொள்ளு ஆகாது.....!

பாரத பிரதமர் மாண்புமிகு மோடி அவர்கள் பணபரிவர்த்தனையை ஒழித்து காசில்லாத பொருளாதாரம் கொண்டு வர முயற்சிக்கிறார்.....அதன் முதல் கட்ட முயற்சியாக மதுரை தமிழன் தான் பயன்படுத்திய பொது கழிப்பிடத்திற்கு ரூபாய் 5 யை காசோலையாக வழங்கி உள்ளார்....




ஆனாலும் இவ்வளவு லொள்ளு ஆகாது தம்பி.....!

Sunday 4 December 2016

நல்லதொரு குடும்பம் பல்கலைகழகம் - உண்மையாகுமா......!

குடும்பம் என்ற வார்த்தை நமது சமுதாயத்தின் ஆணிவேர் என்பதை யாரும் மறக்கமுடியாது. நாடு நன்றாக இருக்கவேண்டும் என்றால் , ஊர் நன்றாக இருக்கவேண்டும். ஊர் நன்றாக இருக்கவேண்டும் என்றால் , வீடு நன்றாக இருக்கவேண்டும். வீடு நன்றாக இருக்கவேண்டும் என்றால் குடும்பம் நன்றாக இருக்கவேண்டும்..

நல்லதொரு குடும்பம் பல்கலைகழகம் என்ற வரியை நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் உண்மையில் இன்றைய குடும்பங்கள் பல்கலைகழகங்களாக இருக்கிறதா என்பது மில்லியன் டஜன் கேள்வி. பணமும் , புகழும் , பட்டமும் மாத்திரம் குடும்பத்தை உயர்த்தும் என்று நினைத்தால் , அது தவறு.....!

நல்ல ஒரு குடும்பம் உருவாகவேண்டும் என்றால் , குடும்பத்தின் உறுப்பினர்களாகிய கணவன் , மனைவி , பிள்ளைகள் எப்படி வாழவேண்டும் என்று விவிலியம் கூறுவதை கொஞ்சம் பாருங்கள்....


கணவன் :

" புருஷர்களே உங்கள் மனைவிகளில் அன்புகூறுங்கள்" - எபே 5 : 25

தினம் ஒரு நான்கு முறையாவது அன்பான வார்த்தைகளை கூறலாமே..!
     நான் உன்னை நேசிக்கிறேன்...
     நான் ரொம்ப கொடுத்து வைத்தவன்.....
     இப்படி ஒரு மனைவி கிடைக்க என்ன தவம் செய்தேன்.....

" புருஷர்களே , உங்கள் மனைவிகளில் அன்புகூறுங்கள் , அவர்கள் மேல் கசந்து கொள்ளாதிருங்கள்..."  - கொலோ 3 : 19

கசப்பான வார்த்தைகள் மனதை காயப்படுத்திவிடும்.....கீழ்க்கண்ட வார்த்தைகள் இன்று குடும்பங்களில் சாதாரணம்....தவிர்க்கலாமே...!
     உன்னை கட்டினதுக்கு ஒரு எருமையை கட்டியிருக்கலாம் ...!
     உன்னால எனக்கு ஒரே வேதனை தான்....!

" புருஷர்களே , மனைவிக்கு செய்ய வேண்டிய கனத்தை செய்யுங்கள் " -  1 பேதுரு 3 : 7
     வெளியே போகும் போது , உங்கள் மனைவியையும் கூட்டிக்கொண்டு போங்கள்....அவர்களை மிகுந்த மரியாதையுடன் நடத்துங்கள்.....மற்றவர்களிடம் எனது மனைவி என்று பெருமையுடன் அறிமுகப்படுத்துங்கள்.....


மனைவி :-

" மனைவிகளே உங்கள் சொந்த புருஷருக்கு கீழ்படியுங்கள்...." - எபே 5:22

நமது குடும்பத்தில் மிஸ் ஆகிற பெரிய காரியம் இதுதான்....இது பெண்ணடிமை என்று வாதிடுவோர் உண்டு....பெண் அடிமை அல்ல ஆனால் ஒரு நல்ல மனைவி தன் புருஷனுக்கு உடனே கீழ்ப்படிந்தால் குடும்பத்தில் எவ்வளவு பிரச்சினைகள் வராமல் போய்விடும்.  வாக்குவாதங்களும் , தர்க்கங்களும் தானே நமது குடும்பத்தை சீரழிக்கிறது.....

"தகுதியான வஸ்திரத்தினாலும் , நாணத்தினாலும் , தெளிந்த புத்தியினாலும் , நற்கிரியைகளினாலும் தங்களை அலங்கரிக்கவேண்டும் " - 1 தீமோ 2 : 1௦

ஆகா....! எவ்வளவு அருமையான வரிகள்....எந்த பியூட்டி பார்லர் போய் கோடிகணக்கிலே கொட்டி அழகு செய்தாலும் , இந்த அழகுக்கு ஈடாகுமா....?.

பிள்ளைகள் :-

"பிள்ளைகளே உங்கள் பெற்றோருக்கு கீழ்படியுங்கள் " - எபே 6 : 1

பெற்றோர் எது சொன்னாலும் எதிர்த்து பேசுவது பிள்ளைகளின் வேலையாகிவிட்டது. நீங்களெல்லாம் Outdated என்று இன்றைய பிள்ளைகள் பெற்றோரை உதறி தள்ளுகிறார்கள்.  உங்களை பெற்று , படிக்கவைத்து , ஆளாக்கி அழகு பார்த்த பெற்றோருக்கு கீழ்ப்படிந்தால் , குடும்பம் எவ்வளவு அழகாக இருக்கும்.....


இப்படிப்பட்ட குடும்பம் பல்கலைகழகம் அல்லாமல் வேறென்ன....!  இந்த சமுதாயத்தில் நாம் இதை காண்போமா.....?

Wednesday 30 November 2016

கருப்பு பண மீட்பு என்ற பெயரில் ஒரு விளையாட்டு

"பிள்ளையை கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டிவிடுதல்" என்ற மொழியை அறியாத தமிழர்கள் யாருமே இருக்கமாட்டார்கள் என்பது எனது திடமான எண்ணம்..! நல்லா தூங்கிகிட்டு இருந்த பிள்ளையை வேண்டும் என்றே கிள்ளி விட்டு , அது அழ ஆரம்பித்தவுடன் தொட்டிலை ஆட்டி பெயர் வாங்குவது தான் அந்த மொழியின் அர்த்தம்....!

இந்த மொழிக்கும் , கருப்பு பண மீட்புக்கும் என்ன தொடர்பு என்று ஒரு கேள்வி எழும்பத்தான் செய்கிறது...சற்று சிந்திப்போமே....!

கருப்பு பணம் என்றால் என்ன என்பதை நாம் முந்தைய பதிவுகளில் சிந்தித்து இருக்கிறோம்.  கணக்கில் காட்டாத பணம் மக்கள் மத்தியில் புழங்கி கொண்டு இருக்கிறது. அதை கண்டுபிடிக்க தான் இந்த போராட்டம் எனவே நாம் ரத்தம் சிந்தவும் ( இராணுவ வீரர்களை போல ) என்று ஒரு கூட்டம் பிரசாரம் செய்கிறது. ஆனால் சில உண்மைகள் என்னை வேதனைப்படுத்துகிறது....!

உலகையே பொருளாதார சீரழிவு தாக்கினபோதும் கூட, இந்தியா தாக்குபிடித்த காரணம் , முந்தைய அரசில் இருந்த சில பொருளாதார நடவடிக்கைகள் என்பதை யாரும் மறக்க முடியாது. மறுக்கவும் முடியாது. ஆனால் கருப்பு பண மீட்பு என்ற போர்வையில் இப்போது செய்யப்படும் இந்த திட்டம் மாபெரும் பொருளாதார சீரழிவுக்கு நேராக மக்களை கொண்டுபோவதை அநேகர் புரிந்து கொள்ளமுடியவில்லை.  சரி....நாம் கட்டுரைக்கு வருவோம்.....

முந்தைய அரசின் காலத்தில் ( அதாவது மார்ச் 2014ல் ) பண புழக்கம் , வங்கிகளின் பண இருப்பு மற்றும் பொதுமக்களிடம் இருக்கும் பணம் மற்றும் தற்போதைய அதே காரணிகளை ( ஜூலை 2௦16 ல் ) ரிசர்வ் வங்கியின் தளத்தில் இருந்து ஆராய்ந்து பார்த்தால் , ஒரு ஆச்சரியம் மிஞ்சுகிறது....




Year Month
Currency In Circulation
(பில்லியன் )
வங்கி இருப்பு (பில்லியன் )
Currency With Public (பில்லியன் )
மார்ச் 2014
13010.74
552.55
12458.19
மார்ச் 2௦15
14483.12
621.31
13861.82
மார்ச் 2௦16
16634.63
662.09
15972.54
ஜூலை 2௦16
17361.77
750.34
16611.43


மேலே குறிப்பிட்ட அட்டவணையில் இருந்து பார்த்தால் 2 வருட காலத்திற்குள் 4,351.03 பில்லியன் அளவிற்கு பணப்புழக்கம் அதிகரித்து உள்ளது. மாத்திரம் அல்ல மக்களிடம் உள்ள பணம் என்று கணக்கிடப்பட்டதில் 4153.24 பில்லியன் அதிகரித்து உள்ளது.  1 பில்லியன் என்பது 1௦௦௦ மில்லியன் ( 1 மில்லியன் என்பது 1௦ லட்சம் ). அதாவது 4153,24,00,00,000 ரூபாய் . அதாவது 41.53 லட்சம் கோடி அதிகமாக இந்த வருடத்தில்  புழக்கத்தில் அனுமதிக்கப்பட்டு உள்ளது .

சரி போகட்டும்...! 5௦௦ ரூபாய் மற்றும் 1௦௦௦ ரூபாய்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது அல்லவா...! ஒவ்வொரு நிதி ஆண்டிலும் கைவசம் இருந்த 5௦௦ மற்றும் 1௦௦௦ ரூபாய் நோட்டுகளின் மதிப்பும் ரிசர்வ் வங்கி தளத்தில் இருந்து பெறப்பட்டது....

மாதம் / வருடம்
5௦௦ ரூபாய்
( பில்லியன் )
1௦௦௦ ரூபாய்
( பில்லியன் )
மார்ச் 2014
5702.48
5081.37
மார்ச் 2௦15
6563.91
5612.45
மார்ச் 2௦16
7853.75
6325.68
மார்ச் 2௦14 ல் இருந்து மார்ச் 2௦16 வரை அதிக அளவில் அச்சடிக்கப்பட்டு மக்கள் மத்தியில் புழக்கத்திற்கு விடப்பட்ட 5௦௦ ரூபாய் மற்றும் 1௦௦௦ ரூபாய் மதிப்பு
அதிகம்
2151.27 பில்லியன்
1244.31 பில்லியன்


இந்த 2 வருடத்தில் அதிகமாக 2151270000000 ( 21.57 லட்சம் கோடி 5௦௦ ரூபாயிலும் ) 1244310000000 ( 12.44 லட்சம் கோடி 1௦௦௦ ரூபாயிலும் ) ஆக மொத்தம் 34.01லட்சம் கோடி புதிதாக சந்தைக்குள் இந்த 2 வருடத்தில் அனுமதிக்கப்பட்டு உள்ளது.

பல மாதங்களாக திட்டமிடப்பட்டு தான் 5௦௦ ரூபாய் மற்றும் 1௦௦௦ ரூபாய் திரும்பபெறப்படுகிறது என்று கூறபட்டாலும் , கீழ்க்கண்ட கேள்விகள் மனதில் எழும்ப தான் செய்கிறது...

1.       இப்படி ஒரு திட்டம் இருந்தால் , அதிக அளவில் 5௦௦ ரூபாய் மற்றும் 1௦௦௦ ரூபாய் நோட்டுகள் இந்த இரண்டு வருடத்தில் புழக்கத்தில் விடப்பட்டதின் காரணம் என்ன...?

2.       கடந்த 2 வருடங்களாக பணபுழக்கத்தை படிப்படியாக குறைத்து இருந்தால் , மீதம் உள்ள 5௦௦ ரூபாய் மற்றும் 1௦௦௦ ரூபாய்களை மாற்றுவது எளிதாக இருக்குமே...?

3.       கடந்த இரண்டு வருடத்தில் பணம் அச்சிட செலவழிக்கப்பட்ட தொகை மீந்திருக்குமே...?

4.       நீங்களே பணப்புழக்கத்தை அதிகமாக்கி , நீங்களே திரும்ப வாங்கி , அது தான் கருப்பு பணம் என்று நம்ப வைப்பதின் இரகசியம் என்ன...?


மொத்தத்தில் ஓன்று தான் தோன்றுகிறது....." பிள்ளையை கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டிவிட்ட கதை தான் " இது....