கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்ட குழுவினருடன் நான்காம் கட்ட பேச்சு வார்த்தைக்கு மத்திய குழுவினர் நெல்லை ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்தனர் . இந்த சூழலில் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்த இந்து முன்னணியினர் மற்றும் போராட்ட குழுவினர் மோதி கொண்ட காட்சிகள் பரபரப்பாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாயின . தொலைக்காட்சியின் மூலம் கிடைத்த தகவல்களை கொஞ்சம் ஆராய்ந்து பார்த்தால் , திட்டமிட்ட சில செயல்கள் திரை மறைவில் நடந்திருக்கலாமோ என்ற சந்தேகம் எனக்கு எழுகிறது ...
பேச்சு வார்த்தையில் கலந்து கொள்ளுவதற்காக திரு,. புஸ்பராயன் நெல்லை ஆட்சியர் அலுவலகத்திற்கு தனது காரில் வந்துள்ளார் . அவருடன் கூட இடிந்தகரையில் இருந்து 20 பெண்களும் மத்திய குழுவினிடத்தில் மனு கொடுப்பதற்காக வந்திருந்தார்கள் . ஏற்கெனவே முன் அனுமதியோடு மத்திய குழுவினிடத்தில் மனு கொடுப்பதற்காக காத்திருந்த இந்து முன்னணியினர் மற்றும் போராட்ட குழு பெண்கள் காரசாரமாக பேசி கொண்ட விவகாரம் அடி தடியில் முடிவுற்றது . இந்த சூழலில் வன்முறையில் ஈடுபட்டதாக சொல்லி இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டுளார்கள் . இது தான் நடந்த விவகாரம் . இப்பொழுது எனது கீழ்க்கண்ட கேள்விகளை தொகுத்து பாருங்கள் .
1 . இந்த 20 பெண்களும் ஏன் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வர வேண்டும் ...? அதுவும் முன் அனுமதி இல்லாமல் ...? 31 ம் தேதி பேச்சு வார்த்தை நடக்கிறது என்று ஒரு மாதத்திற்கு முன்பு தேதி அறிவிக்கப்பட்ட படியினால் , முன் அனுமதி வாங்குவதற்கு தேவையான கால அவகாசம் இருந்ததே ...? அதை ஏன் செய்யவில்லை ...? செய்தால் தேவையான பாதுகாப்பு போட்டு விடுவாகள் என்ற பயமா ...?
2 . மத்திய குழு நாங்கள் அமைத்த குழுவிடம் பேசவில்லை எனில் எங்களுக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று திரு . உதயகுமார் நேற்று வரை சொன்னார் , இன்று எப்படி 20 பெண்களை மத்திய குழுவிடம் மனு கொடுக்க அனுப்பினார் ...?
3 . போராட்ட பெண்களும் , ஒரு ஜோல்னா பை வைத்திருந்தவரும் உடனடியாக கோஷம் போட்டதை பார்த்தால் , இவர்கள் தயாராய் தான் வந்திருப்பார்கள் போல அல்லவா தோன்றுகிறது ...
கலவரம் செய்தது இந்து முன்னணியாய் இருப்பின் , அவர்கள் மேல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் . ஆனால் அதே நேரத்தில் பேச்சு வார்த்தையை தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஏதாவது திரை மறைவு வேலைகளை செய்து மக்கள் மத்தியில் சமாதானத்தை கெடுக்கிறார்களோ அவர்கள் கண்டறியப்பட்டு தகுந்த தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்பது தான் இந்த இந்தியனின் ஆசை
கலவரம் செய்தது இந்து முன்னணியாய் இருப்பின் , அவர்கள் மேல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் . ஆனால் அதே நேரத்தில் பேச்சு வார்த்தையை தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஏதாவது திரை மறைவு வேலைகளை செய்து மக்கள் மத்தியில் சமாதானத்தை கெடுக்கிறார்களோ அவர்கள் கண்டறியப்பட்டு தகுந்த தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்பது தான் இந்த இந்தியனின் ஆசை