நார்வே என்றவுடன் நமது நினைவுக்கு வருவது " நோபல் பரிசு " தான் . அமைதிக்கு மிக முக்கியத்துவம் கொடுக்கும் நாடு என்பது பெரும்பாலோனோரின் கணிப்பு . ஆனால் நார்வே நாட்டின் திரட்சி அடைய வைக்கும் ஒரு சட்டத்தை குறித்து நாளேடுகளில் படித்ததின் விளைவு தான் இந்த பதிவு.
சமீபத்தில் கொல்கத்தாவை சேர்ந்த முதிய தம்பதியினர் நமது நாட்டின் ஜனாதிபதியை அணுகி தங்கள் பேரக் குழந்தைகளை நார்வே அரசிடம் இருந்து மீது தர சொல்லி ஒரு மனுவை கொடுத்தார்கள் . அதன் விளைவு தான் இந்த அதிர்ச்சி தகவல் .
இந்த வயதான பெற்றோரின் மகனும் , மருமகளும் நார்வே நாட்டில் பணியாற்றி வருகிறார்கள் . அவர்களுக்கு 3 வயதில் ஒரு மகனும் , 6 மாதத்தில் ஒரு மகளும் உள்ளனர் . இந்த மூன்று வயது மகன் அங்கு உள்ள ஒரு பள்ளியில் சேர்க்கப்பட்டிருந்தான் . அங்கு மிக அதிகமாக குறும்பு செய்ததால் பள்ளியின் ஆசிரியர்கள் , அந்த பையனின் பெற்றோர் மீது CHILD CARE ACT ல் (பிள்ளைகளை சரியாக வளர்க்கிறார்களா இல்லையா என்பதற்கான சட்டம் ) புகார் செய்தார்கள். .
புகாரின் நிமித்தம் ஒரு குழுவினர் ஒரு வாரத்திற்கு , தினம் ஒரு மணி நேரம் அந்த வீட்டில் இருந்து பிள்ளைகளை வளர்ப்பதை கவனித்து பார்த்தார்களாம் . இது தான் விசாரணை . இந்த விசாரணையின் முடிவில் , அந்த தாய்க்கு குழந்தையை வளர்க்கும் தகுதி இல்லை ( அதிகமாக உணவூட்டுகிறார் என்றும் பொறுமையாக இல்லை ) என்று தீர்ப்பு செய்து அவர்களின் 2 பிள்ளைகளையும் எடுத்து கொண்டு நார்வே அரசின் காப்பகங்களில் சேர்த்து விட்டார்கள் . அதுவும் இரு பிள்ளைகளையும் இரண்டு வெவ்வேறு காப்பகங்களில் சேர்த்து உள்ளார்கள் .
தங்களது விசா இன்னும் சில மாதங்களில் முடிய உள்ளதால் , தாங்கள் பெற்ற பிள்ளை தங்களுக்கு கிடைக்குமா என்ற பதை பதைப்பில் பெற்றோர்கள் உள்ளனர் . தாயும் , தந்தையும் பிரிந்தால் குழந்தையை தந்தையிடம் ஒப்படைக்க தயார் என நார்வே அரசு அறிவித்துள்ளது .
சரியாக வளர்க்க முடியாத காரணத்தினால் குழந்தைகளை எடுத்து சென்று நாங்கள் வளர்க்கிறோம் என்று அரசு கூறுவது ஒரு முன்னேற்றம் போல காணப்பட்டாலும் , இந்த சிறுவயதில் தாயின் , அத்தந்தையின் அன்பை இலனது விட்ட குழந்தைகளுக்கு உங்களால் / அங்கள் சட்டத்தால் அந்த அன்பை கொடுக்க முடியுமா ...? என்பது தான் இந்த இந்தியனின் கேள்வி ...
No comments:
Post a Comment
நாகரீகமான கருத்துகள் பகிருங்கள் .... ஆக்கப்பூர்வமான கேள்விகள் கேளுங்கள் ... நன்றி