தற்பொழுது தேசத்தில் நடந்து வரும் சில விரும்ப தகாத சம்பவங்களில் முல்லை பெரியாறு அணை விவகாரம் மிக பெரிய பங்கு வகித்தாலும் , அதை குறித்த செய்திகளை நாளேடுகளில் வாசிக்கும் போது பெரும் துயரம் அடைந்தேன் .
தமிழக மக்கள் பலர் கேரளாவில் தாக்கப்பட்டதாகவும் , சபரிமலை போன நண்பர்களின் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதாகவும் , அதே போல கேரள நண்பர்களின் கடைகள் சிலரினால் அடித்து நொறுக்கப்பட்டதாகவும் , பாதுகாப்பு குறித்த அச்சம் இரண்டு மாநில நண்பர்களிடமும் ஏற்ப்பட்டிருப்பதையும் வாசிக்கும் போது மனம் நொந்து போனேன் .
தமிழக மக்கள் பலர் கேரளாவில் தாக்கப்பட்டதாகவும் , சபரிமலை போன நண்பர்களின் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதாகவும் , அதே போல கேரள நண்பர்களின் கடைகள் சிலரினால் அடித்து நொறுக்கப்பட்டதாகவும் , பாதுகாப்பு குறித்த அச்சம் இரண்டு மாநில நண்பர்களிடமும் ஏற்ப்பட்டிருப்பதையும் வாசிக்கும் போது மனம் நொந்து போனேன் .
சிறு வயதில் பள்ளியில் படிக்கும் போது ஒவ்வொரு வாரம் திங்கள் கிழமையும் காலையில் உறுதி மொழி என்று ஒன்றை சத்தமாய் வாசிக்க சொல்லுவார்கள் . இப்பொழுதும் என் மனதில் அது ரீங்காரமிடுகிறது.
என் தாய் நாடு இந்தியா ....
இந்தியர் அனைவரும் என் உடன்பிறந்தவர்கள் ...
என் தாய் திரு நாட்டை
உளமார நேசிக்கிறேன் ......
அதன் புகழுக்கு ஏற்ப
நன்மகவாய் விளங்க என்றும் முயல்வேன்....
அன்புடன் என்னை ஈந்த அன்னை ....
ஆருயிர் தந்தை ...
ஆன்ற முதியோர் அனைவரையும் வணங்குவேன் .....
என் நாட்டிற்கும் அதன் மக்களுக்கும்
என் வந்தனம் என்றும் உரியது ....
என் நாட்டவர் நலமும் வளமுமே
இன்பமென உளம் பூரிப்பேன் ........
இந்தியர் அனைவரும் என் உடன்பிறந்தவர்கள் ...
என் தாய் திரு நாட்டை
உளமார நேசிக்கிறேன் ......
அதன் புகழுக்கு ஏற்ப
நன்மகவாய் விளங்க என்றும் முயல்வேன்....
அன்புடன் என்னை ஈந்த அன்னை ....
ஆருயிர் தந்தை ...
ஆன்ற முதியோர் அனைவரையும் வணங்குவேன் .....
என் நாட்டிற்கும் அதன் மக்களுக்கும்
என் வந்தனம் என்றும் உரியது ....
என் நாட்டவர் நலமும் வளமுமே
இன்பமென உளம் பூரிப்பேன் ........
ஒரு கோரசாய் உறுதி மொழியை சொல்லி முடித்த பிறகு நிலவும் சிறிய நேர அமைதியில் தேசத்திற்காக நாங்கள் இருக்கிறோம் என்ற பெருமையை உணர்ந்த தருணங்களை நினைத்து பார்க்கிறேன்.
வேற்றுமையில் ஒற்றுமை என்பதே நமது தாய் திரு நாட்டின் தாரக மந்திரம் என்பதை அழுத்தம் திருத்தமாக முழங்க வேண்டிய தருணத்தில் நாம் இருக்கிறோம் . முல்லை பெரியாறு அணை விவகாரம் மிக முக்கியமானது என்பதை நான் மறுக்கவில்லை . ஆனால் அதே நேரம் , ஒன்றும் அறியாத அப்பாவி தமிழர்களையும் , மலையாள நண்பர்களையும் தாக்குவது எந்த விதத்தில் நியாயம் ....?
நமது தேசத்தின் ஒற்றுமையை குலைக்க தீய சக்திகள் முயற்சிக்கலாம் , தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கலாம் , நெருப்பு மூட்டி அனல் காயலாம் . இந்த இந்தியனின் தாழ்மையான வேண்டுகோள் என்னவெனில் அமைதி காத்து , வன்முறைகளில் ஈடுபடாமல் இருப்பதோடு மட்டுமல்லாமல் , வன்முறைக்கு பாதிக்கபடுபவர்களுக்கு உதவுவோம் ... தீய சக்திகளை அடையாளம் காண்போம் .... தேசத்தை காப்போம் , தேசத்திற்காய் உழைப்போம் ...
நம் தேசம் ....நம் இந்தியா .... வந்தே மாதரம் ....!
அப்பாவி மக்களை தாக்குகிறவன் எவனும் மனிதனே அல்ல...
ReplyDeleteபகிர்வுக்கு வாழ்த்துகள்... நண்பா...
உருதிமொழியில் முதல் வரியில் இந்தியா முதலில் வரும்... நண்பரே...
ReplyDelete(ஆனால் பொருள் ஒன்றுதான்.)