Tuesday 22 November 2016

கருப்பு பணம் - ஹவாலா பணம் - ஒரு அலசல்


இந்த பதிவு நேற்றைய பதிவின் தொடர்ச்சியாக எழுதப்படுகிறது. கருப்பு பணத்தில் இன்னும் ஒரு முக்கியமான பகுதி இருக்கிறது..அதன் பெயர் ஹவாலா பணம்.  அல்வா கேள்விப்பட்டு இருக்கிறோம். அது என்ன ஹவாலா என்று கேட்க தோன்றுகிறதா   ....? தொடர்ந்து படியுங்கள்....
சட்ட ரீதியாக அல்லாமல் பணம் பரிமாறுவது தான் ( அதாவது வங்கியின் மூலம் அல்லாமல் ) ஹவாலா என்று அழைக்கபடுகிறது. சரி இது எப்படி நடக்கிறது என்று பார்ப்போம்....

A என்று சொல்லகூடிய நபர் ( முந்தைய பதிவின் படி இவர் X பிரிவை அதாவது தொழில் அதிபர்கள் , நடிகர்கள் , அரசியவாதிகள் பிரிவை சேர்ந்தவர் ) இந்தியாவில் இருக்கும் B என்ற நபரிடம் ( இவர் ஒரு புரோக்கர் ) தனது கருப்பு பணத்தையும் , ஒரு பாஸ்வோர்ட் யும் கொடுப்பார். அந்த பாஸ்வோர்ட் மற்றும் பணமதிப்பு போன்றவை  B என்ற இந்திய புரோக்கரினால் வெளிநாட்டில் இருக்கும் C என்ற புரோக்கருக்கு கொடுக்கப்படும். அதேநேரத்தில் இந்தியாவில் இருக்கும் A என்ற நபர் வெளிநாட்டில் இருக்கும் D என்ற தனது பினாமிக்கு பாஸ்வேர்ட் மற்றும் பணமதிப்பை தெரியப்படுத்துவார். D என்ற வெளிநாட்டு பினாமி C என்ற வெளிநாட்டு புரோக்கரிடம் சென்று பாஸ்வோர்ட் கூறி பணத்தை அந்த நாட்டு பணத்தில் பெற்று கொள்ளுவார்.  அதற்க்கு கூலியாக இரு புரோக்கர்களும் ஒரு தொகையை எடுத்து கொள்ளுவார்கள்.  இது தான் ஹவாலா....

இந்த கட்டத்தில் A விடம் இருக்கும் கருப்பு பணம் B யிடம் இருப்பது உண்மைதான்...எனவே இப்போது 5௦௦ மற்றும் 1௦௦௦ ருபாய் நோட்டுகளை திரும்ப ஒப்படைத்தால் B மாட்டிகொள்ளுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. இதை கருத்தில் கொண்டு கீழ்க்கண்ட சில காரியங்களை சிந்திப்போம்...

1.       உண்மையான கருப்பு பண முதலை A தப்பி கொண்டார். அவரது பணம் மிக பாதுகாப்புடன் D உதவியுடன் வெளிநாட்டு வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டாயிற்று.....

2.       A யிடம் இருந்து வந்த கருப்பு பணத்தை B ஏதாவது ஒரு விதத்திலே சமூக பொருளாதாரத்தில் கலந்திருக்க வாய்ப்புண்டு...அதாவது நிலங்கள் , வீடுகள் , தங்கம் போன்றவற்றை வாங்கியிருந்தால் , B யும் பாதுகாப்பாகி விட்டார்...

3.       B தன்னிடம் இருக்கிற இந்திய பணத்தை அயல்நாட்டில் இருக்கிற C எஜெண்டுக்காக இந்தியாவில் செலவிடவும் வாய்ப்புண்டு....

4.       இப்போது நிலங்களை விற்ற சராசரி மனிதனிடம் கருப்பு பணம் வந்து விட்டது.....
சரி....வெளிநாட்டு வங்கிகளில் இருக்கும் பணத்தை வைத்து கொண்டு A யினால் சும்மா இருக்க முடியுமா....? அதை மறுபடியும் வெள்ளையாக்கினால் தானே அவருக்கு நிம்மதி....இருக்கவே இருக்கிறது FDI ( Foreign Direct Investment ).  

பன்னாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக இந்த திட்டம் முந்தைய அரசால் கொண்டுவரப்பட்டது. ஆனாலும் 49% முதலீடுகள் மாத்திரமே அனுமதிக்கப்பட்டது.... இன்றைய அரசு பெரும்பாலான துறைகளில் அந்நிய முதலீட்டை தாராளமாய் நுழைத்தது....உதாரனத்திற்க்கு....

1.       பாதுகாப்பது துறையில் 49%  ல் இருந்து 1௦௦% மாக
2.       ஆன்லைன் வர்த்தகத்தில் 1௦௦% அனுமதி
3.       மருந்து துறையில் 74% அனுமதி..
4.       இந்திய விமான போக்குவரத்தில் 1௦௦ சதவீத அனுமதி...

இப்படி பல துறைகளில் வெளிநாட்டு முதலீடுகள் தாராளமாய் அனுமதிக்கப்பட்டது..இதற்க்கும் நாம் சிந்திக்கும் ஹவாலா என்ற கருப்பு பணத்திற்கும் சம்பந்தம் இருக்கிறதா ...? என்றால் இருக்கிறது ....

வெளிநாட்டில் தனது பணத்தை வைத்து இருக்கிற A என்ற நபர் அந்த நாட்டில் தனது பினாமி D பெயரில் ஒரு கம்பெனி துவங்குவார். அந்த கம்பெனி இந்திய பங்கு சந்தை  மூலமாக தனது பணத்தை "Participatory Note / P-Note"  என்ற முறையில் முதலீடு செய்யும்.  இப்போது அந்த பங்குகளின் மூலமாக கிடைக்கும் லாபம் வெளிநாட்டில் உள்ள Dக்கு போய் சேர்ந்து விடும்....எனவே தான் ஒன்றுமில்லாத மொரிசியஸ் தீவுகள் நமது நாட்டில் 36% முதலீடு செய்துள்ளது....

இப்போது என் கேள்வி ஓன்று தான்....கருப்பு பணம் போகும் வழியும் , திரும்ப இந்தியாவுக்கு வரும் வழியும் தெரிந்து இருக்கிறதே....உடனடியாக Participatory Note மூலமாக இந்திய கருப்பு பணம் உள்ளே வருவதை அரசு தடுக்கலாமே....இதனால் A மாத்திரமே பாதிக்கப்படுவான்....அன்றாடம் கூலிவேலை செய்கிற குப்பனிடம் ஹவாலா என்று சொன்னால் அல்வா என்று தான் சொல்லுவான்.... அடித்தட்டு மக்களிடம் பெறப்பட்ட பணத்தை கருப்புப்பணம் என்று சொல்லி பெயர் வாங்க நினைக்கும் முயற்சி மிக்க வருந்த தக்கது.....


என் சிற்றறிவுக்கு எட்டியபடி எழுதியுள்ளேன்.....

No comments:

Post a Comment

நாகரீகமான கருத்துகள் பகிருங்கள் .... ஆக்கப்பூர்வமான கேள்விகள் கேளுங்கள் ... நன்றி