Wednesday 23 November 2016

ஏமாளிகள் ஊரில் கோமாளி ராஜா.....சத்தியமா இது கதைதான்....நம்புங்க....

ஒரு ஊரில ஒரு பெரிய குளம் இருந்ததாம்...அந்த குளத்தில நிறைய வகை மீன்கள் சந்தோசமா வாழ்ந்து கொண்டு இருந்ததாம்...அந்த குளத்தில சில முதலைகளும் வாழ்ந்து வந்ததாம்....அந்த குளத்திற்கு ஒரு நாள் ராஜாவை தேர்ந்தெடுக்கும் படி முடிவு செய்யப்பட்டதாம்....எனவே அந்த குளத்தின் மீன்களும் , முதலைகளும் சேர்ந்து கொக்கை ராஜாவாக தேர்ந்து எடுத்ததாம்...அந்த கொக்கு நல்லா பேசும் என்பது தான் அந்த கொக்கின் சிறப்பு....

இந்த கொக்கு பல குளங்களுக்கும் அப்பப்போ பறந்து போயிட்டு வரும்மாம். அப்படி வரும்போதெல்லாம் இந்த மீன்களுக்கு ஒரே சந்தோசமா இருக்கும்.. கொக்கு ஒவ்வொரு நாளும் சொல்லும் காரியங்களை கேட்க கேட்க சொர்க்கதிற்க்கே போன மாதிரி ஒரு பெருமை இந்த அப்பாவி மீன்களுக்கு.....

ஒரு நாள் இந்த கொக்கு ராஜா மீன்களை பார்த்து சொல்லிச்சாம்...நாளைக்கு உங்களுக்காக நான் ஒரு பெரிய காரியம் செய்யப்போகிறேன் என்று.!....மீன்களுக்கு ஒன்றுமே புரியவில்லை...
கொக்கு ராஜா சொல்லிச்சாம் , " இந்த குளத்தில முதலைகளுக்கு இனிமேல் வேலை இல்லை , ஏனென்றால் இந்த குளத்து தண்ணீரை கருப்பா மாத்திருச்சு அந்த முதலைகள் ". அப்பவும் நிறைய மீன்களுக்கு ஒன்னுமே புரியல...!  அப்பதான் கொக்கு ராஜா தனது திட்டத்தை விவரிக்க ஆரம்பித்தது...." மக்கா....இந்த குளத்தில இருக்கிற கருப்பு தண்ணிய எல்லாம் நான் தூர ஊத்திட்டு , முதலைகளை பிடிச்சுட்டு , பிறகு நல்ல சுவையான தண்ணியால இந்த குளத்தை நிரப்ப போறேன் " என்று....

இந்த திட்டத்தை கேட்டவுடன் , நிறைய மீன்களுக்கு கண்ணுல தண்ணியே வந்துட்டாம்....ஐயோ...! இந்த ராஜாவுக்கு எவ்வளவு நல்ல மனசுன்னு ஊரெல்லாம் வாழ்த்த ஆரம்பிச்சாங்களாம்..! சில புத்திசாலி மீன்களுக்கு என்னவோ தப்பு நடக்கபோவதாக தோன்ற , சில கேள்விகளை கேட்டுச்சாம்...உடனே சில பெரிய மீன்கள் சொல்லிச்சாம் , " கேள்வி கேட்ககூடாது . சாமி குத்தம் ஆயிடும்....உனக்கு இந்த குளத்து மேல அக்கறையில்லையா...." என்று....

குளத்தில இருக்கிற தண்ணிய எடுக்க ஆரம்பிச்சாங்க...! மீன்கள் எல்லாம் ஒரே சந்தோசம்..... "நம்ம தண்ணியை அழுக்கா மாத்துற முதலைகளை நம்ம ராஜா பிடிக்க போறார் " . கொக்கு ராஜா வேலையை ஆரம்பிச்சிட்டு , தூரத்தில இருக்கிற ஒரு குளத்துக்கு வழக்கம் போல போயிட்டாம்...

குளத்தில உள்ள முதலைகள் எல்லாம் அழகா வெளியே வந்து ஒரு ஓரமா உட்கார்ந்து குளத்தில தண்ணி எடுக்கிறத ரசிக்க ஆரம்பிச்சுட்டுதான்.. முதலைகள் தான் நீரிலும் நிலத்திலும் வாழுமே....! என்ன காரணமோ தெரியல....இந்த முதலைங்க குளத்து பக்கத்துல சில நல்ல குழிகளை வெட்டி வச்சிருக்கு.....சந்தோசமா குதித்த மீன்களுக்கு திடீரென்று மூச்சு திணறல்....தண்ணீ குறைய ஆரம்பிச்சுட்டு......

கொக்கு ராஜாவை எங்க ...? யாரும் பாத்தீங்களா....? ஒரே கூக்குரல்.....கண்ணுக்கெதிரே சில வயசான மீன்கள் செத்து விழுது ....! குளமே ஒரே குழப்பமா இருக்கு....! இன்னும் சில சாக கிடக்குது....! கேள்வி கேட்ட மீன்களை எல்லாம் திட்டின மீன்களுக்கு ஒன்னுமே சொல்லமுடியல...! எல்லாம் காத்துக்காக தவிக்குது....! ஒரே பெருமூச்சு....!

கொக்கு ராஜா பறந்து வந்திச்சு....அய்யோ....! என் மீன்களே என்று அழுதிச்சாம்....! வீட்டுக்கு போய் சாப்பிடாம இருந்திச்சாம்....சாகபோகிற மீன்களுக்கு நம்ம ராஜாவுக்கு நம்ம மேல நல்ல பாசம் அப்படின்னு நினைச்சிகிட்டே ஒன்னொன்னா மயங்கிச்சு.....!

அடுத்த குளத்தில் கொக்கு ராஜா பேசிகொண்டிருக்கு , " அந்த குளத்தில இருந்த கருப்பை எல்லாம் சுத்தமாக்கியாச்சு....குளத்தை கருப்பாக்கின ஒருத்தனும் இன்னைக்கு இல்ல "....ஒரே கைதட்டல்....ஒரே விசில்....! யாருடா என்று திரும்பி பார்த்தால்...." அட நம்ம முதலைகள் .....". பாவம் ...இவைகளை பார்ப்பதற்கும் , கேட்பதற்கும் மீன்களுக்கு தான் கொடுப்பினை இல்லை....ஏனென்றால் செத்துவிட்டதே.....!


கதை முடிந்திச்சு....! கத்தரிக்காய் காய்ச்சிச்சு....!

4 comments:

  1. நல்ல கற்பனை. ஆனால் உண்மை.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி நண்பரே... தொடர்ந்து வருகை தாருங்கள்....

      Delete
  2. புருடாஸுன்னு நீங்களே சொன்னதுக்கப்புறம்..

    ReplyDelete
    Replies
    1. கதை தான் நண்பரே...! ஆனால் உங்களுக்கு ஏதோ புரிந்தது போல இருக்கிறதே....! தொடர்ந்து வருகை தாருங்கள்...!

      Delete

நாகரீகமான கருத்துகள் பகிருங்கள் .... ஆக்கப்பூர்வமான கேள்விகள் கேளுங்கள் ... நன்றி