Tuesday 31 January 2012

திட்டமிட்ட வன்முறையா ...? - கூடங்குளம் பரபரப்பு ..!


கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்ட குழுவினருடன் நான்காம் கட்ட பேச்சு வார்த்தைக்கு மத்திய குழுவினர் நெல்லை ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்தனர் .  இந்த சூழலில்  ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்த இந்து முன்னணியினர்  மற்றும் போராட்ட குழுவினர் மோதி கொண்ட காட்சிகள் பரபரப்பாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாயின .   தொலைக்காட்சியின் மூலம் கிடைத்த தகவல்களை கொஞ்சம் ஆராய்ந்து பார்த்தால் , திட்டமிட்ட சில செயல்கள் திரை மறைவில் நடந்திருக்கலாமோ என்ற சந்தேகம் எனக்கு எழுகிறது ...



பேச்சு வார்த்தையில் கலந்து கொள்ளுவதற்காக திரு,. புஸ்பராயன் நெல்லை ஆட்சியர் அலுவலகத்திற்கு தனது காரில் வந்துள்ளார் .  அவருடன் கூட இடிந்தகரையில் இருந்து 20 பெண்களும் மத்திய குழுவினிடத்தில் மனு கொடுப்பதற்காக வந்திருந்தார்கள் .  ஏற்கெனவே முன் அனுமதியோடு மத்திய குழுவினிடத்தில் மனு கொடுப்பதற்காக காத்திருந்த இந்து முன்னணியினர் மற்றும் போராட்ட குழு பெண்கள் காரசாரமாக பேசி கொண்ட விவகாரம் அடி தடியில் முடிவுற்றது .   இந்த சூழலில் வன்முறையில் ஈடுபட்டதாக சொல்லி இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டுளார்கள் .  இது தான் நடந்த விவகாரம் .  இப்பொழுது எனது கீழ்க்கண்ட கேள்விகளை தொகுத்து பாருங்கள் .



1 .  இந்த 20  பெண்களும் ஏன் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வர வேண்டும் ...?  அதுவும் முன் அனுமதி இல்லாமல் ...?  31 ம் தேதி பேச்சு வார்த்தை நடக்கிறது என்று ஒரு மாதத்திற்கு முன்பு தேதி அறிவிக்கப்பட்ட படியினால்  ,  முன் அனுமதி வாங்குவதற்கு தேவையான கால அவகாசம் இருந்ததே ...?  அதை ஏன் செய்யவில்லை ...?  செய்தால் தேவையான பாதுகாப்பு போட்டு விடுவாகள் என்ற பயமா ...?

2 .  மத்திய குழு நாங்கள் அமைத்த குழுவிடம் பேசவில்லை எனில் எங்களுக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று திரு .  உதயகுமார் நேற்று வரை சொன்னார்  , இன்று எப்படி 20 பெண்களை மத்திய குழுவிடம் மனு கொடுக்க அனுப்பினார் ...?


 3 .  போராட்ட பெண்களும் , ஒரு ஜோல்னா பை வைத்திருந்தவரும் உடனடியாக கோஷம் போட்டதை பார்த்தால் ,  இவர்கள் தயாராய் தான் வந்திருப்பார்கள் போல அல்லவா தோன்றுகிறது ...

கலவரம் செய்தது இந்து முன்னணியாய்  இருப்பின்  , அவர்கள் மேல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் .  ஆனால் அதே நேரத்தில் பேச்சு வார்த்தையை தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஏதாவது திரை மறைவு வேலைகளை செய்து மக்கள் மத்தியில் சமாதானத்தை கெடுக்கிறார்களோ  அவர்கள் கண்டறியப்பட்டு தகுந்த தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்பது தான் இந்த இந்தியனின் ஆசை

2 comments:

  1. தவறு செய்தவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. சகோ. கூடல் பாலா , தங்கள் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி . நிச்சயம் ... தப்பு எங்கே என்று கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்பது தான் எனது ஆசையும்

      Delete

நாகரீகமான கருத்துகள் பகிருங்கள் .... ஆக்கப்பூர்வமான கேள்விகள் கேளுங்கள் ... நன்றி