Sunday 6 November 2011

கூடங்குளம் அணு உலைகள் பாதுகாப்பானது - திரு . அப்துல் கலாம்


ரஷ்ய நாட்டு உதவியுடன் தமிழ்நாட்டின் கூடங்குளம் பகுதியில் 1000 MWe மின்சாரம் தயாரிக்கும் அணுமின் நிலையங்களின் கட்டுமான பணிகள் முடிந்து மின் உற்பத்தி துவங்கும் நிலையில் உள்ளது .   இந்த நிலையில் அணு மின் நிலையத்தின் பாதுகாப்பு குறித்த அச்சம் பொது மக்கள் மத்தியில் நிலவுவதால் அணு மின் நிலையத்திற்கு எதிராக பொதுமக்கள் போராடி வருகிறார்கள் .   இந்த சூழ் நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு குறித்த அம்சங்களை ஆராய்வதற்காக விஞ்ஞானி அப்துல் கலாம் இன்று கூடங்குளம் வருகை தந்தார் .


 ஆய்வை முடித்த பின்பு நிருபர்களிடம் பேசிய திரு .  அப்துல் கலாம் அவர்கள் " கூடங்குளம் அணு மின் நிலையங்கள் உயர் தொழில் நுட்பத்தில் கட்டப்பட்டிருப்பதால் மிகவும் பாதுகாப்பானது " என்று தெரிவித்துள்ளார் .   கூடங்குளம் அணுமின் நிலையம் கட்டப்படுவது அந்த பகுதிக்கு கிடைத்த வரப்பிரசாதம் எனவும் அறிவித்துள்ளார் .  தேசத்தின் அத்தனை மனிதர்களாலும் மதிக்கப்படும் உன்னத விஞ்ஞானியான திரு, அப்துல் கலாம் இப்படி சொல்லி இருப்பது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ள நிலையில் இந்த கருத்துகளை ஏற்று கொள்வதில்லை என போராட்ட குழுவினர் அறிவித்திருப்பது வேதனையான விஷயம் தான் 

இந்த சூழலில் போராட்ட குழு தலைவர் திரு. உதயகுமார் அவர்கள் தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுக்கும் போது சொன்ன சில காரியங்களை நினைத்தால் கொஞ்சம் சிரிப்பாக இருக்கிறது .
  1. திரு . அப்துல் கலாம் அவர்கள் அணு விஞ்ஞானி அல்ல அதனால் அவரின் கருத்துகள் ஏற்றுகொள்ள முடியாது என்றார். 
     உண்மை தான் .  திரு, அப்துல் கலாம் அவர்கள் ஏரோநாட்டிகல் பொறியாளர் தான் .  ஆனால் அணுசக்தி துறையிலும் அவரது பணிகள் இருந்தது என்பதை உலகம் அறியும் .   சரி .... திரு . உதயகுமார் அவர்களே ... நான் ஒரு கேள்வி கேட்கிறேன் .. உங்களை பார்த்து ....  நீங்கள் அணு விஞ்ஞானியா ...? அணுவை பற்றி உங்களுக்கு என்ன தெரியும் ...?  அப்படியே அணு விஞ்ஞானிகள் சொன்ன கருத்துகள் கூட உங்களுக்கு ஆகாதே ....!
  2. USA ,  ஜப்பான்  , பிரான்ஸ் விஞ்ஞானிகளை விட இந்திய விஞ்ஞானிகள் பெரியவர்களா என்று கேட்டார் ...  
     திரு உதய குமார் அவர்களே .... ஆமா  நம்ம நாட்டு விஞ்ஞானிகள் பெரியவர்கள் தான் ....  நீங்கள் மேற்சொன்ன எந்த நாட்டு விஞ்ஞானியும் கண்டுபிடிக்காத உண்மையை நம்ம நாட்டு விஞ்ஞானிகள் அனுப்பிய சந்திராயன் தான் கண்டுபிடித்தது என்பதை மறந்து போக கூடாது
  3. மக்களாகிய எங்களை என் திரு . அப்துல் கலாம் சந்திக்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார் .
     ஐயா .  நீங்கள் தானே அப்துல் கலாமை சந்திக்க விரும்பவில்லை என்று நாளேடுகளுக்கு பேட்டி கொடுத்தீர்கள் .  என்ன பிள்ளையை கில்லி விட்டு தொட்டிலை ஆட்டுகிறீர்களா...?


 இந்தியாவின் தலை சிறந்த விஞ்ஞானியான திரு . அப்துல் கலாமின் கருத்தை இவர்கள் என்று கொள்ளாதபோது யார் கருத்தை தான் ஏற்று  கொள்ளுவார்கள்.   பொறுத்திருந்து பார்ப்போம் .

4 comments:

  1. அணுமின்சாரக் கட்டுக்கதைகளும் கூடங்குளமும்

    http://arulgreen.blogspot.com/2011/11/blog-post.html

    ReplyDelete
  2. No atomic reactor is safe to say scientifically. We do not have enough experience to learn how human error cause an accident in a reactor. For this we need to learn from many such accidents. Air travel safety is still improved for accidents continuoesly occur. Accidents are unavoidable. Yet we travel in air. But in a atomic reactor accident is not permissible. It destroys lives for ages. As a common man I know these truth. But Dr. Kalam, knowing well all these truth did not speak it, making himself a mocking object. Dr. Kalam was never disrespected before. As a scientist he should speak what is best for the people. He miserably failed. His stature is very tall. He said Koodangulam reactor is 'safe' based on available safety precautions while the element of human error is still unedited. We do not have enough knowledge about it. I pitied him for he played into the hands of politicians. He admits that 25% waste is not recyclable, an indispensable commodity and the govt is going to use it for making atomic bombs. It means threats on us is increased. India is not safe in the hands of such scientists however tall they are.

    ReplyDelete
  3. 25% waste from atomic reactor is a criminal load we are going to leave on back of future generations. We still don't know how to dispose it. In such condition how can he say the reactor is safe. The entire world is rethinking atomic reactor. No one is ready to protect the idea. Because of the huge investment govt try to save Koodankulam project. I pity that it does not mind about the people's lives. Also Dr. Kalam did this.

    ReplyDelete
  4. @ palanivelu : Sir , reply had been given in the article திரு . அப்துல் கலாமுக்கா இந்த வார்த்தைகள் .? - ஒரு வேதனை குமுறல்

    Thank You

    ReplyDelete

நாகரீகமான கருத்துகள் பகிருங்கள் .... ஆக்கப்பூர்வமான கேள்விகள் கேளுங்கள் ... நன்றி