Saturday 11 February 2012

ஒய் திஸ் கொலைவெறி - ஒரு பார்வை

சென்னையில் சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் தமிழ்நாட்டையே ஒரு உலுக்கு உலுக்கி விட்டது .  9 ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவன் தனது ஆசிரியை கத்தியால் 14 தடவை குத்தி கொலை செய்திருக்கிறான் .  இந்த செய்தி என்னை மிகவும் பாதித்து விட்டது .  உடனடியாக ஒரு பதிவு எழுத முற்பட்டேன் . ஆனால் சமயம் வாய்க்காததினால் கொஞ்சம் பிந்தி விட்டது .


வளரும் இந்தியாவின் மிக பெரிய தூண்கள் என்று அழைக்கப்படும் மாணவ சமுதாயம் இந்த நாட்களில் போகும் பாதை சரிதானா ...? என்ற கேள்வி எங்கும் தொனிக்கிறது ....  மாணவர்கள் TV பார்க்கிறார்கள்  , கொலை , குத்து போன்றவற்றை சினிமாவில் பார்க்கிறார்கள் ... அதனால் தான் கேட்டு போகிறார்கள் என்று ஒரு பொதுவான கருது வைக்கப்பட்டாலும் , இந்த இளம் சமுதாயத்தை தவறான பாதையில் நாம் தான் வழிநடத்துகிறோம் என்ற உண்மையை நாம் அறிந்தால் அதிர்ச்சியாக தான் இருக்கும் ...


சமீப காலமாக தமிழ்நாட்டில் நடக்கும் எந்த போராட்டங்களிலும் , மாணவ செல்வங்களை அதிகமாக காண முடிகிறது . இது ஒரு ஆணித்தரமான உண்மை .  கூட்டம் அதிகம் சேர வேண்டும் என்ற காரணத்தினாலோ அல்லது மனித கேடயம் போல அவர்களை பயன்படுத்தி கொள்ளலாம் என்ற காரணத்தினாலோ மாணவர்களை அதிகமாக பயன்படுத்துகிறார்கள் .  ஆனால் யாரும் இதை கண்டுகொள்ளுவதில்லை என்பது தான் வேதனையிலும் வேதனை .


நீங்களே யோசித்து பாருங்கள் ... பள்ளி சென்று , கற்று , ஒழுக்கத்தையும் கீழ்படிதலையும் பெற்று சமுதாயத்தின் தூண்களாய் மாற வேண்டிய இளம் குருத்துகள் , தவறான மனிதர்களால் போதிக்கப்பட்டு , தவறான கொள்கைகள் கற்பிக்கப்பட்டு , கற்று தரவேண்டிய காரியங்கள் இழந்து போய் , சீரழிக்கப்பட்டு வருகின்றனர் .   ஒரு வேளை இது பார்ப்பதற்கு அருமையாக இருக்கலாம் .  ஆனால் இந்த சமுதாய சீரழிவு வெளிச்சத்திற்கு வரும் பொழுது , அதன் முடிவு பரிதாபமாக இருக்கும் .


சமீபத்தில் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு விரோதமாக மக்களை போராட தூண்டும் கூட்டம் குறி வைத்து இருப்பதும் இந்த மாணவர்களை தான் என்பது தான் எனது எண்ணம் .  எந்த போராட்டமாய் இருந்தாலும் , மாணவர்களை முன்னாள் நடக்க சொல்லும் , இந்த கயவர்கள் , இந்த நாளைய தலைமுறையின் சீரழிவுக்கு பொறுப்பு ஏற்பார்களா என்றால் இல்லை ..... நான் சொல்லும் காரியம் ஒரு அபாண்டமாய் தோன்றலாம் .. ஆனால் உண்மை அநேக நேரங்களில் கசக்க தான் செய்யும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இருக்கமுடியாது ..


இந்த இந்தியனின் கோரிக்கை ஒன்றே ஓன்று தான் ... நீங்கள் இந்த வளரும் சமுதாயத்திற்கு நல்லது செய்யவில்லை என்றால் கூட பரவாயில்லை , இவர்கள் வாழ்வு மாத்திரமல்லாமல் , இந்திய குடியரசின் எதிர்காலத்தையே நாசமாக்கும் வழிகளில் இவர்களை நடத்தாது இருங்கள் என்பதே .....

No comments:

Post a Comment

நாகரீகமான கருத்துகள் பகிருங்கள் .... ஆக்கப்பூர்வமான கேள்விகள் கேளுங்கள் ... நன்றி