Friday 24 February 2012

தினமணியின் கட்டுரை சரியானதா ....?


இன்றைய தினமணியின் ( தேதி 24 . 02 . 2012 ) ,  கட்சிகளை கடக்கும் காலம் என்ற கட்டுரையை வாசித்து முடித்த உடன் இந்த பதிவு எழுதும் எண்ணம் தோன்றியது ...  திரு ,. பா . செயப்ப்ரகாசம் என்ற அறிஞர் இந்த கட்டுரையை  எழுதி உள்ளார் .  நடுநிலை நாளிதழ் என்று பெருமையுடன் நான் கேள்விப்பட்ட இந்த நாளிதழில் வெளியிடப்பட்ட இந்த கட்டுரையை 6 வது பக்கத்தில் நாம் காணலாம் .


மக்களால் , மக்களை கொண்டு தேர்ந்து எடுக்கப்படும் ஆட்சி  தான் மக்களாட்சி என்பது நாம் அனைவரும் அறிந்த விடயம் .  ஆனாலும் மக்களாட்சியின் பிரதிநிதிகள் அரசியல் அமைப்பு சட்டத்தின் படி மக்களை திறமையாக அரசாலும் முறைகள் ஏற்க்கனவே அரசியல் அமைப்பு சட்டத்தில் தெளிவாக எழுதப்பட்டு உள்ளது . இந்த நிலையில் இந்திய அரசியல் அமைப்பிற்கு எதிராக வரையப்பட்டு உள்ள இந்த கட்டுரை எகிப்து , துனிசியா போன்ற நாடுகளில் எழுந்தது போல புரட்சி இங்கும் எழும்பி உள்ளது போன்ற மாயையை உருவாக்க முனைந்து உள்ளது .  இது கண்டிக்கப்பட வேண்டிய செயலாகும் .  

எகிப்து , துனிசியா நாடுகளில் சர்வாதிகார ஆட்சி நிகழ்ந்தது . அங்கு இந்த கட்டுரை ஆசிரியர் இந்த அளவுக்கு சுதந்திரமாக எழுதி இருக்க முடியாது . ஆனால் மக்களாட்சி தத்துவத்தில் நம்பிக்கை கொண்டு உள்ள மாபெரும் ஜனநாயக நாடான இந்தியா இவருக்கு எல்லா உரிமைகளையும் கொடுத்து இருப்பதால் இப்படி சுதந்திரமாக எழுதவும் , பேசவும் முடிகிறது என்பதை எப்படி மறந்து போனார் ....?


கூடங்குளம் போராட்ட தலைமை ஒவ்வொரு நகர்வையும் மக்களிடம் கலந்து அறிவித்தனர்  அதனால் தான் மத்திய அரசும் , மாநில அரசும் அவர்களை போய் கெஞ்ச வேண்டிய நிலைமை வந்ததாக பெருமை பொங்க எழுதி உள்ள கட்டுரை ஆசிரியருக்கு நான் சில கேள்விகள் வைக்க உள்ளேன் . 

  1. உங்களின் கட்டுரைப்படி வட்டாரங்களில் இருந்து மக்கள் தலைமையை உருவாக்க வேண்டுமானால் , அமெரிக்க குடியுரிமை வைத்திருக்கும் ஒருவர் எப்படி தலைவராய் மாற முடியும் ....?
  2. உங்களின் கட்டுரைப்படி கூடங்குளம் போராட்ட தலைமை ஒவ்வொரு நகர்வையும் மக்களிடம் கலந்து அறிவித்ததாக வைத்து கொள்ளுவோம்  , மத்திய குழு கொடுத்த 77 பக்கம் பதில்கள் ஏன் மக்களிடம் போய் சேரவில்லை ....?
  3. உங்களின் கட்டுரைப்படி மத்திய அரசும் , மாநில அரசும் மக்களிடம் கெஞ்சி நிற்பதாக நீங்கள் நினைத்தால் அது உங்கள் தவறு .  ஒரு குற்றமும் அறியாத ஜனங்கள் தங்களை தவறாக வழிநடத்தும் சக்தியின் பின் நிற்பதால் தான் அரசு மக்களை நினைத்து பரிதாபப்படுகிறது . அதனால் தான் அரசுகள் மென்மையாக மக்களை அணுகுகிறது ....
  4. ஜனநாயகத்தை போராட்டங்கள் மூலமாக தான் மேல் எழும்ப செய்யமுடியும் என்ற தங்கள் கருத்து முற்றிலும் ஜனநாயகத்திற்கு மாறுபட்டதாய் , மக்களின் தேசிய உணர்வை வளர்க்காமல்  , மக்களை போராட தான் தூண்டுகிறது   இப்படி நாட்டின் உண்மையான , ஆக்கப்பூர்வமான வளர்ச்சிக்கு உதவாத உங்கள கட்டுரை பிரசுரிக்கப்படுவத்ர்க்கு இந்த நாட்டை விட்டால் எங்கும் நீங்கள் இப்படி சொல்லமுடியாது ....

நடுநிலை நாளிதழ் என்ற பெயர் பெற்று இருக்கும் தினமணி இப்படி கட்டுரைகளை வெளியிடுவது நல்லது அல்ல.  அப்படி தொடர்ந்து செய்யப்படுமானால் ஒரு சீரற்ற சமுதாயத்தை இந்தியாவில் ஆதரிக்கும் பத்திரிகை என்ற பெயரை நீங்கள் பெறுவீர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை .

3 comments:

  1. your view is wrong sir

    ReplyDelete
    Replies
    1. Dear anonumous Friend ,

      Thank you for your visit. I do accept your valuable comment. But kindly give me the details , where i am wrong...?

      Thank You...

      Delete
  2. முத்துப்பேட்டையில் கொய்யாமஹாலில் 29th திருகுர்ஆன் ஓதும்போட்டி மிகச்சிறப்பாக நடைபெறும் இன்ஷாஅல்லாஹ்.........

    ReplyDelete

நாகரீகமான கருத்துகள் பகிருங்கள் .... ஆக்கப்பூர்வமான கேள்விகள் கேளுங்கள் ... நன்றி