Saturday 25 February 2012

கூடங்குளம் விவகாரம் - பிரதமரின் நிலைப்பாடு என்ன ..?



கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டத்தில் வெளிநாட்டில் இருந்து தொண்டு நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்ட பணம் (   சேவை செய்வதற்காக )  பயன்படுத்த படுவதாக மாண்பு மிகு பாரத பிரதமர் அவர்கள் அளித்த கருத்து மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .
 
 

கூடங்குளம் அணுமின் நிலயத்திற்கு எதிராக திரு . உதயகுமார் அவர்கள் பல பொய்யான காரியங்களை கூறி மக்களை போராட்டத்தில் ஈடுபடுத்தி வருகிறதை பல பதிவுகளில் இதே வலைப்பூவில் எழுதி இருக்கிறேன் .  இந்த நிலையில் மாண்பு மிகு பாரத பிரதமர் அவர்கள் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் , "  வெளிநாட்டில் இருந்து NGO எனப்படும் தொண்டு நிறுவனகளுக்கு அனுப்பப்படும் பணம் தவறாக போரரட்ட செலவுகளுக்கு பயன்படுத்தப்படுவதாக" பேட்டி அளித்துள்ளார் .
 
 
 மிகவும் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ள இந்த பேட்டி கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டத்திற்கு ஒரு முற்று புள்ளியை ஏற்ப்படுத்த வேண்டும் என்ற எழுச்சியை உண்டுபண்ணியுள்ள அதே நிலையில் திரு . உதயகுமார் இந்த பேட்டியை வன்மையாக கண்டித்துள்ளார் .  
 
 
இந்த சூழலில் திரு . நாராயணசாமி அவர்கள் அளித்த தகவலின் படி , " கூடங்குளம் பகுதியில் செயல்பட்ட 3 NGO கள் , அதாவது தொண்டு நிறுவனங்கள் இப்படி வெளிநாட்டு நிதியை போராட்டத்திற்கு அளித்து வந்தது கண்டு பிடிக்கப்பட்டதால் , அவற்றின் Licence ரத்து செய்யப்பட்டுள்ளது " என்று அறிவித்து உள்ளார் .


ஏற்கெனவே , திரு , நாராயணசாமி இப்படி அறிவிக்கும் பொழுது எல்லாம் , அவர் மேல் வழக்கு தொடுப்பதாக மிரட்டல் விடுத்த திரு . உதயகுமார் இன்று வரையும் அதை ஏன் செய்யவில்லை என்பதயும் ,. தமது மடியில் கணம் இல்லையெனில் ஏன் போராட்ட கணக்குகளை வெளியிடவில்லை என்ற கேள்விகளுக்கும் போராட்ட குழுவில் பதில் இல்லை .

 
மக்களின் கண்களுக்கு தேராமல் நடக்கும் இந்த கண்ணாமூச்சி ஆட்டத்தில் வெற்றி பெறுவதற்காக திரு . உதயகுமார் , அரசுக்கு எதிராக மக்களை உசுப்பேற்றி வரும் ( அரசு மக்களை தவறாக நடத்துவதாக ) அதே நேரத்தில்  , அரசு அந்த 3 NGO களின் பெயர் , மற்றும் அவைகளின் நடவடிக்கைகள் குறித்த தெளிவான விளக்கத்தை மக்களுக்கு அறிவித்தால் , திரைக்கு பின்னால் இருந்து மக்களை இயக்கும் சில சக்திகளின் போலி முகமூடி கிழிக்கப்படும் என்பதே இந்த இந்தியனின் விருப்பம் .

1 comment:

நாகரீகமான கருத்துகள் பகிருங்கள் .... ஆக்கப்பூர்வமான கேள்விகள் கேளுங்கள் ... நன்றி